சும்மா / ஞானக்கூத்தன் கவிதைகள்

இறுகத் திருகியதும் கழுத்தில் துளிர்த்ததை மனத்தில் கண்டு எழுது கோலைத் தேடி எடுத்தேன் போதுமா இன்னும் ஊற்ற வேண்டுமா? மூடுதல் எளிமை திறப்பது கடினம் மூடலே கடினமாய் இருக்குமானால்? எளியதாய்த் திறந்து கொண்ட எழுது கோலின் தொண்டைக் குள்ளே ஒலிக்காத சொற்கள் போலக் குமிழிகள். ஊதிப் பார்த்தேன். ஊசியால் குத்திப் பார்த்தேன் குமிழியில் ஒன்று கூட அதற்கெல்லாம் உடையவில்லை ஊற்றினேன் மையை மை மேல் வந்தது குமிழிக் கூட்டம் வெளியிலே விழுந்தடித்து திருகினேன் இறுக்கி. அங்கே கழுத்தில்… Continue reading சும்மா / ஞானக்கூத்தன் கவிதைகள்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன ஆசை மிகுந்த அணிலொன்று வந்தது பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது. முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித் தடுத்திழுத்து நிறுத்திய போதும் ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க உலவைப் பழங்கள் எங்கும் சிதறின ஜன்னலை விட்டுத் திரும்பினேன் எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று.

நட்டு / ஞானக்கூத்தன் கவிதைகள்

வட்டச் சந்திலும் சதுரச் சந்திலும் மூன்றுநாட் புழுதி அடைந்திருக்கும் இரும்பு நட்டொன்று எதிரில் கிடந்தது எங்கும் இனிமேல் பொருந்தாத நட்டு என்றாலும் பாரம் அதற்கொன்று உண்டு எடுத்துக் கொண்டேன் உள்ளங்கையில் உருட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன் கிண்ணத்து நீரில் மூழ்க வைத்தேன் சாலிக்ராம பூசை செய்வதாய் அம்மா என்னைப் போற்றத் தொடங்கினாள் இனிமேல் வீட்டில் சுபிட்சம் என்றாள் மனைவி பார்த்து கெக்கலித்தாள் பிள்ளைகள் அதனை ஆசை தீரதர தெருவில் பந்தாடிக் களித்தார்கள் அதற்கு பின்பு நட்டு வலைஞன்… Continue reading நட்டு / ஞானக்கூத்தன் கவிதைகள்

பிரிவும் சேர்க்கையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

என்னை நோக்கிக் கையொன்று நீண்டது. குச்சிக் குப்பை ரேகை படர்ந்த உள்ளங் கையைத் தொடர்ந்து பார்த்தேன். இல்லை யென்றும் அதற்குள் சொன்னேன். இல்லை யென்றதும் மடங்காத தனது கையை எடுத்துக் கொண்டு அவள் நகர்ந்தாள். இருப்பிடத்துக்குத் திரும்பும் பொழுது சட்டைத் துணியில் மசித் துளிக் கறை போல் அவளது கண்கள் நினைவில் எழுந்தன. பிச்சையே எடுப்பாள் என்று நினைத்தேன். இரண்டாம் வகுப்பின் கழிவறைப் பக்கம் சீட்டில்லாமல் பயணம் செய்வாள் அப்படி ஒருநாள் பார்க்கும் பொழுது கொடுப்பதாய் எண்ணினேன்.… Continue reading பிரிவும் சேர்க்கையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

சந்தேகத்துடனே தொட்டுப்பார்த்தேன் பையிலிருந்த பேனாவைக் காணோம் வழியில் எங்கோ விழுந்து விட்டது நீண்ட நாட்களாய்ப் பழகிய பேனா எங்கே விழுந்ததோ யாரெடுத்தாரோ ஒருகணம் நினைத்தேன் வழியில் அதன்மேல் வண்டி ஒன்று ஏறிவிட்டதாய். எண்ணிப் பார்த்ததும் உடம்பு நடுங்கிற்று வண்டி எதுவும் ஏறியிராது. பள்ளிக்கூடத்துப் பிள்ளையின் கையில் கிடைத்திருக்கலாமென்று எண்ணிக் கொண்டேன். முள்ளைக் கழற்றிக் கழுத்தைத் திருகிப் பல்லால் கடித்துத் தரையில் எழுதி அந்தப் பையன் பார்ப்பதாய் எண்ணினேன் அதற்கும் நடுங்கி எண்ணத்தை மாற்றினேன் எவனோ ஒருவன் கிழவன்… Continue reading இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

குப்பைத் துணை / ஞானக்கூத்தன் கவிதைகள்

அவருடன் காகிதக் குப்பைச் சுருளொன்று அவருக் கிணையாய் விரைந்து வந்தது அவரால் அழைத்து வரப்படுவதைப் போல் அன்னார் என்னைக் கடந்து சென்றார் அதுவும் அவரைத் தொடர்ந்து சென்றது என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி.

மழையில் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழையில் நனைந்த கந்தல்த் துணி மீது பாத சாரியின் செருப்புக் கால் ஊன்றி அகன்றது. கந்தல்த் துணியின் தண்ணீர் பிழியப்பட்டு ஊர்ந்ததைக் கண்டேன் நெஞ்சம் நெகிழ்ந்தது. உவமை ஒன்று துன்புற்ற தென்று.

கடற்கரையில் சில மரங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

கடற் கரையில் சில மரங்க ளென்று நான் கவிதை எழுத நினைத்திருந் தேன். எதையும் நி னைத்ததும் மு டிக்க வேண் டும். மு டிக்க வில்லை யென்றால் ஏ தும் மாற் றம் ஆ கிவிடும். அம் ம ரத்திலொன்றை இன்று நி லைகு லையச் சாய்த்து தொடர்ந்து பி ளந்து தொ டர்ந்து வா ளாலறுத் துத் துண் டுதுண் டுதுண் டுதுண் டாக்கிக் கி ளைமு றித்துப் பூ சிதறி இ லை… Continue reading கடற்கரையில் சில மரங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஓட்டை ரூவா / ஞானக்கூத்தன் கவிதைகள்

நடத்துநர் பக்கம் நீட்டிய பொழுதே நெஞ்சம் சற்று தடதடத்தது. இடமும் வலமும் தலையை அசைத்துத் திருப்பித் தந்தார் இரண்டு ரூவாயை. வாங்கிக் கொண்டேன் வீதிப் பக்கம் விரித்துப் பார்த்தேன். நடுவில் ஓட்டை… ஓட்டை வழியாய்ப் பார்த்தேன். கட்டிடங்கள் ஓடிச் சென்றன விரைவாய். அக்குளைக் காட்டிப் பரத நாட்டியம் ஆடும் ஒருவனின் வண்ணச் சித்திரம் இசைக் கேடான இடத்தில் மசியால் தடவப் பட்ட ஒருத்தியின் படமும் தலைவரின் படங்கள் கோஷங்கள் சென்றன. ரூவாய்த் தாளை மடித்துப் பைக்குள் வருத்தத்தோடு… Continue reading ஓட்டை ரூவா / ஞானக்கூத்தன் கவிதைகள்