மிளகாய்ப் பழங்கள் மாடியில் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன
ஆசை மிகுந்த அணிலொன்று வந்தது
பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து
கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது.
முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித்
தடுத்திழுத்து நிறுத்திய போதும்
ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க
உலவைப் பழங்கள் எங்கும் சிதறின
ஜன்னலை விட்டுத் திரும்பினேன்
எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று.