மழையில் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழையில் நனைந்த கந்தல்த் துணி மீது
பாத சாரியின் செருப்புக் கால்
ஊன்றி அகன்றது.
கந்தல்த் துணியின் தண்ணீர்
பிழியப்பட்டு ஊர்ந்ததைக் கண்டேன்
நெஞ்சம் நெகிழ்ந்தது.
உவமை ஒன்று துன்புற்ற தென்று.