வேதாந்தக் கும்மி / ஆவுடை அக்காள் கவிதைகள்

‘கும்மியடி பெண்கள் கும்மியடி அகோர சம்சார சாகரத்தில் ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம் சிந்தித்துக் கும்மியடியுங்கடி- தினம் வந்தித்துக் கும்மியடியுங்கடி’

வேதாந்த ஆச்சே போச்சே / ஆவுடை அக்காள் கவிதைகள்

‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே சத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’ ‘ஜாதி வர்ணாசிரமம் போச்சே வேத சாஸ்திரம் வெறும் பேச்சே’ ‘காம குரோதமும் போச்சே மோக இருளும் போச்சே’

அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி / ஆவுடை அக்காள் கவிதைகள்

’கடத்தை இடித்தால் தாண்டி கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி புரத்தை இடித்தால் தாண்டி பரிபூரணம் ஆகும் என்றாண்டி’ ’நந்தவனத்திலோர் ஆண்டி- அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’

ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு / ஆவுடை அக்காள் கவிதைகள்

“எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!” சாதிபேதமற்ற நிலை “கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே! குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!” “மோகத்தைக் கொன்றுவிடு!” என்ற பாரதிக்கு மூலம் “மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று” பயனென்ன? “காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய் உன்னாசை போச்சோ மூடா..” வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு “தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு ஏலேலோ ஏகாந்த ரஸம்! ஏலேலோ… Continue reading ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு / ஆவுடை அக்காள் கவிதைகள்

கீழவெண்மணி / தணிகைச் செல்வன் கவிதைகள்

வெண்மணியில் மாமிசங்கள் கருகியவாடை – வீசி விலகுமுன்னே கண்டதென்ன நீதியின் பாதை? வெண்மணியின் தீயில் செத்தான் நீதிதேவனும் – . எங்கள் வேதனையில் வளருகிறான் ஜாதி தேவனும்

முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய / தணிகைச் செல்வன் கவிதைகள்

முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ…! பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம் முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ…! கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வேர்க்கலையோ…! ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோறுக்கும் இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரை காண்கிலையோ…! அய்யோ உலகே ! அய்யகோ பேருலகே ! பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ? கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த… Continue reading முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய / தணிகைச் செல்வன் கவிதைகள்

கல்லறை காயாது / தணிகைச் செல்வன் கவிதைகள்

சிரித்தபடியேதான் நீ சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில் சந்தேகமில்லை எமக்கு. சமர்க்கள வீச்சாயினும் சமாதானப் பேச்சாயினும் இரண்டிலும்- சலவை செய்த உன் சிரிப்பைச் சந்திக்க எதிரிகளே அஞ்சினார்கள். உன்-புன்னகையின் வெண்ணிறமே புரட்சியின் விடிவெள்ளியாய்த் தோன்றியது புலித் தோழர்களுக்கு அந்தப் – புன்னகைக்குள்ளே ஒரு புரட்சியே பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பகைவர்களுக்கு. ஞாலச் சிறப்புக்கு வான்படையை ஊக்கிய உன் ஞானச் சிரிப்புக்கு நடுங்கினான் மகிந்தன். கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம் அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும் கற்றுச் செரித்த களகர்த்தனே, எதிரிகள் உன்னைக்… Continue reading கல்லறை காயாது / தணிகைச் செல்வன் கவிதைகள்

எனக்கான வெளிச்சம் / தி. பரமேசுவரி கவிதைகள்

பனிமூடி இருக்கும் வனம் நிறை சூலியாய்க் காடு பூத்திருக்கும் மலர்கள் அடர்த்தியான மரம் செடி கொடிகள் திரியும் விலங்குகள் வெள்ளி நீர் வீழ்ச்சிகள் பனியில் குளிர்ந்து வெயிலில் கருகி மழையில் நனைந்து அசையா மோனத்தில் சூன்யத்தின் நிழல் தேடித் திரும்புகிறது சக மனுஷியை! பாட்டியின் உடலில் உயிர்ப்பு மெல்லிசாய்.. பேத்தியின் திருமணம் பார்க்க ஆசைப்பட்டதில் பத்தாம் வகுப்பு மாணவி மனைவி ஆனாள். முகமற்ற மனிதன் கைப்பிடித்து ஏழு அடி எடுத்து வைக்கையில் மாலை மாற்றுகையில் பக்கத்தில் அமர்கையில்… Continue reading எனக்கான வெளிச்சம் / தி. பரமேசுவரி கவிதைகள்

ஓசை புதையும் வெளி / தி. பரமேசுவரி கவிதைகள்

உரக்கப் பேசுவதாய்க் கோபப் பட்டாய் மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க் குற்றஞ்ச் சாட்டினாய் புணர்ச்சியில் கூட முனகல்கள் தெருவெங்கும் இறைவதாய் எரிச்சல் பட்டாய் வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள் உனக்குள் வெந்நீர்க் கொப்புளங்களையே உருவாக்கின எப்போதும் மெல்ல அடங்கிய என் சப்தங்கள் புதைக்கப்பட்டன உன் வெளியில்!