எனக்கான வெளிச்சம் / தி. பரமேசுவரி கவிதைகள்

பனிமூடி இருக்கும் வனம் நிறை சூலியாய்க் காடு பூத்திருக்கும் மலர்கள் அடர்த்தியான மரம் செடி கொடிகள் திரியும் விலங்குகள் வெள்ளி நீர் வீழ்ச்சிகள் பனியில் குளிர்ந்து வெயிலில் கருகி மழையில் நனைந்து அசையா மோனத்தில் சூன்யத்தின் நிழல் தேடித் திரும்புகிறது சக மனுஷியை! பாட்டியின் உடலில் உயிர்ப்பு மெல்லிசாய்.. பேத்தியின் திருமணம் பார்க்க ஆசைப்பட்டதில் பத்தாம் வகுப்பு மாணவி மனைவி ஆனாள். முகமற்ற மனிதன் கைப்பிடித்து ஏழு அடி எடுத்து வைக்கையில் மாலை மாற்றுகையில் பக்கத்தில் அமர்கையில்… Continue reading எனக்கான வெளிச்சம் / தி. பரமேசுவரி கவிதைகள்

ஓசை புதையும் வெளி / தி. பரமேசுவரி கவிதைகள்

உரக்கப் பேசுவதாய்க் கோபப் பட்டாய் மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க் குற்றஞ்ச் சாட்டினாய் புணர்ச்சியில் கூட முனகல்கள் தெருவெங்கும் இறைவதாய் எரிச்சல் பட்டாய் வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள் உனக்குள் வெந்நீர்க் கொப்புளங்களையே உருவாக்கின எப்போதும் மெல்ல அடங்கிய என் சப்தங்கள் புதைக்கப்பட்டன உன் வெளியில்!