ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு / ஆவுடை அக்காள் கவிதைகள்

“எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி

மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!”

சாதிபேதமற்ற நிலை

“கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே!

குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!”

“மோகத்தைக் கொன்றுவிடு!” என்ற பாரதிக்கு மூலம்

“மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று”

பயனென்ன?

“காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய்

உன்னாசை போச்சோ மூடா..”

வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு

“தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு

தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு

சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு

ஏலேலோ ஏகாந்த ரஸம்!

ஏலேலோ வேதாந்த ரஸம்!”

குயில் கண்ணி

“மனமும் பொய்யடியோ குயிலே

மனக்கூடும் பொய்யடியோ!

இனமும் பொய்யடியோ, குயிலே

தனமும் பொய்யடியோ!”

தீட்டு எதிர்ப்பு

“எச்சில் எச்சிலென்று புலம்புகிறார் மானிடர்கள்

எச்சில் இலாத இடம்

இல்லை பராபரமே!”

“உலகத்துப் பிள்ளையும் உன்

கக்கத்துத் தீட்டன்றோ?

உன்னுடைய வெட்கத்தை யாரொடும்

சொல்வேன் பராபரமே!”

“தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி

நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி

ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி

அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?”