இரட்டை நிழல் / ஞானக்கூத்தன் கவிதைகள்

பறவைகள் சிலவும் மீன்கள் சிலவும் புலம்பு புலம்பென்று புலம்பின. நண்டுகள் வளைகளை மேலும் மேடாக்கின. வானத்தின் கருமையில் வஞ்சனை உண்டெனறு அறிவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்களை ஐந்து திணைக் காரர்களும் கல்லால் அடித்துக் குன்றங்களுக்கு விரட்டி விட்டுச் சிறிய பூசலைப் போன்ற மழையின் மின்னலைப் பாராட்டி மகிழ்ந்திருந்தார்கள். ஆனால் மழையோ போராய்ப் பெருகியது. ஏரிகள் குளங்கள் ஆறுகள் குட்டைகள் கேணிகள் என்பன மாலைக்குள் மாறி எங்கும் தண்ணீர் ஓடாமல் விம்மியது. கட்டழிந்த முந்நீர் ஊருக்குள் கால்வைக்க அங்காடிகள்… Continue reading இரட்டை நிழல் / ஞானக்கூத்தன் கவிதைகள்

காலி / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஒன்றும் அவனுக்குப் பெரிதல்ல எதுவும் புனிதமும் அல்ல. காலி கயவாளி மைதுனத்தில் முடிக்கமுடியாமல் சிக்கிக் கொண்டவன். தந்தையைப் போக்கடித்தான் தாயைக் கொலைசெய்து கடல்நீரில் கைகழுவிக் கப்பலிலே சென்று வந்தான் போக்கடித்த தந்தைக்குத் திவசம் தந்து கொலைசெய்த தாயைக் கள்குடித்து வசைபொழிந்தான். அவனுக்குத் தெரியாதது ஒன்றும் கிடையாது. நாற்றத்தை முள்ளை நெருப்பைப் பிணைத்து குதத்தி லிருந்து தொண்டைக் குழிவரைக்கும் வழிய நிரப்பிக் காலி பவனி வந்தால் கோயில் கடவுள்கள் குலை நடுக்கம் கொண்டார்கள். தங்கள் கனவுகளில் விடாமல் புகமுயலும்… Continue reading காலி / ஞானக்கூத்தன் கவிதைகள்

நாலு தலைக்காரன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

நாலு தலைக்காரன் அற்புத நாக்குக்காரன் நாலு தலைக்குள்ளும் நாக்குகள் நான்கிருக்கும் நாக்குகள் ஒன்றுக்குள்ளே நல்லதாய்ப் பூவிருக்கும் பூவுக்கு வாய்திறந்தால் மெல்லிதாய்க் கானம் வரும் நாக்குகள் ஒன்றுக்குள்ளே வேறொரு பூவிருக்கும் பூவுக்கு வாய்திறந்தால் ஒரு மின்னல் பெண்மைகொள்ளும் நாக்குகள் ஒன்றுக்குள்ளே இன்னொரு பூவிருக்கும் பூவுக்கு வாய்திறந்தால் எங்கெங்கும் நானிருப்பேன் நாலு தலைக்காரன் அற்புத நாக்குக்காரன் நாலு தலைக்காரன் பூக்கிற நாக்குக்காரன்.

எதை எடுத்துக் கூறுவது / ஞானக்கூத்தன் கவிதைகள்

எதை எடுத்துக் கூறுவது நீஙகள் இடமொன்றைத் தெரிவிக்க வேண்டுமென்றால் ஆலமரம் ஒன்றுண்டு அதற்கு நேரே கிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப் போகுமொன்றில் தொடர்ந்து செல்லக் கிட்டும் என்போம் கோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு மேற்காகப் பிரிகின்ற தெருவில் என்போம் தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை ஆனதற்குப் பக்கத்தில் உள்ள தென்போம். இன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம் இஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும் எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால் எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது

தற்செயலாய் என் நிழலை / ஞானக்கூத்தன் கவிதைகள்

தற்செயலாய் என் நிழலைத் தெருவில் பார்த்தேன் அதில் எனது அண்ணன் தோள் இருக்கப் பார்த்தேன். வீட்டுக்குத் திரும்பிவந்து முகத்தைப் பார்த்தேன் அண்ணன் முகம் பிம்பத்தில் கலங்கப் பார்த்தேன் இது என்ன இவ்வாறாய்ப் போயிற் றென்று தெருவுக்குத் திரும்பிவர ஒருத்தன் என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டான். நானும் நின்றேன் அவன்தானா நீ என்றான் இல்லை என்றேன். அவனைப் போல் இருந்தாய் நீ அழைத்தேன் என்றான் சில சொற்கள் நான்பேசத் தொண்டைக்குள்ளே அவன் இசைந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டேன் தோப்புகளின்… Continue reading தற்செயலாய் என் நிழலை / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது / ஞானக்கூத்தன் கவிதைகள்

எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது கடவுள் சொன்னார் தோன்றுக தெருக்கள் என்று எழுந்தன தெருக்கள் பாழில் வைத்தன நடனக் காலை ஆடின தழுவிக் கொண்டு இசைத்தன மூங்கில்க் கீதம் ஊசிகள் சூர்யனாகித் திரும்பின என்றாற் போல எங்கணும் தெருக்கள் பாடிப் பறந்தன. தெருக்கள் தாத்தாப் பூச்சியாய்ப் பாழில் எங்கும் திரிந்தன இடங்கள் தேடி எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது கடவுள் சொன்னார் தோன்றுக தெருக்கள் என்று கோடுகள் முதுகில் ரெண்டு சுமந்திடும் அணிலைப் போல போகிறேன் முதுகில்… Continue reading எல்லாமும் முதலில் பாழாய் இருந்தது / ஞானக்கூத்தன் கவிதைகள்

மீண்டும் அவர்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழைபொழியக் கடமைப் படாதவை எனினும் அழகாய் இருந்தன காலை மேகங்கள். பறக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன் எழும்பினேன் வானில் சிறகை விரித்து புனித கோபுரக் கலசங்கள் சில பறக்கும் எனது கால்களுக்கிடையில் பூமியில். சலனமற்ற மரங்களின் முடிப்பந்தின் ஊடே ஒளிந்திருந்து அவர்கள் சுட்டார்கள் எங்கும் அமராத அந்த பறவை அதோ என்று புகைக் கோலத்தை வானில் வரைந்து நான் விழும்போது அவர்கள் சென்றார்கள் அன்றைய நாளின் பூரணம் கண்டு. எங்கும் அமராத பறவை ஒன்றை உங்களப்பா சுட்டு… Continue reading மீண்டும் அவர்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மண்டையைத் திறந்தால் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மண்டையைத் திறந்தால் மூளைக் களிமண்ணாய்க் காணும் என்று யாரோ சொன்னார். கண்ணால் பார்த்தால் தவிர நான் எதையும் நம்புவதில்லை. என் தலையைத் திறந்து பார்த்தேன் திறந்த இஸ்திரிப் பெட்டியில் போல் மின் சாரம் பாய்ந்திருக்கக் கண்டேன்.

வந்தனம் என்றான் ஒருவன் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வந்தனம் என்றான் ஒருவன் இளங்காலைக் கதிரைக் கண்டு நன்றென்றான் ஒருவன் இரவில் முகிழ்கிற நிலவைக் கண்டு அவன் நின்றான் கால்கள் ஊன்றி ஒரு போதில் வருதல் மற்றப் போதிலே மறைதல் என்னும் இயல் பில்லா முகிலைப் பார்த்து.