அவளிடம் மயங்கு / தபு ஷங்கர் கவிதைகள்

உனக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள். அவளை நீ தேடாதே. தேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள். உனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு காதல் கணத்தில், சட்டென்று அவளே உன் கண் முன்னே தோன்றுவாள். அவ்வளவுதான்… உன் மதி மயங்கிப் போய்விடும். முதல்முறையாக உன் உடல்வேறு; மனம் வேறு என நீ இரண்டாகிப் போவாய். அதன்பிறகு… வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல். வாசலைப் பார்த்தபடியே, அவள் வீடிருக்கும் வீதியில் ஓர் ஆனந்த மயக்கத்தில் அசையாது கிடக்கும்… Continue reading அவளிடம் மயங்கு / தபு ஷங்கர் கவிதைகள்

எனக்கு இரண்டு காதலிகள் / தபு ஷங்கர் கவிதைகள்

ஒருத்தி உன் வீட்டில் வசிக்கிறாள் இன்னொருத்தி என் இதயத்தில் வசிக்கிறாள் …………………………………………. உன்னைக் கண் திறந்து பார்க்கிறேன் அவளை கண் மூடிப் பார்க்கிறேன் …………………………………………. அவளைக் கூட்டிக் கொண்டுதான் உன்னைப் பார்க்க வருகிறேன் உன்னைப் பார்த்துவிட்டு அவளோடுதான் வீடு திரும்புகிறேன் …………………………………………. உன்னிடம் ஒருமுறை காதலைச் சொல்வதற்காக அவளிடம் ஓராயிரம்முறை ஒத்திகை பார்த்திருக்கிறேன் …………………………………………. நீ அவளைப் பார்க்கவேண்டுமென்றால் சொல் அனுமன் தன் நெஞ்சைப் பிளந்து ராமனிடமே ராமனைக் காட்டியது மாதிரி உன்னிடமே உன்னைக் காட்டுகிறேன் ………………………………………….

தேவதைகளின் தேவதை / தபு ஷங்கர் கவிதைகள்

தேவதைகளின் தேவதை. *********************** எதற்காக நீ கஷ்டப்பட்டுக் கோலம் போடுகிறாய். பேசாமல் வாசலிலேயே சிறுது நேரம் உட்கார்ந்திரு போதும். **************** நீ குளித்து முடித்ததும் துண்டெடுத்து உன்கூந்தலில் சுற்றிக் கொள்கிறாயே… அதற்குப் பெயர்தான் முடி சூட்டிக்கொள்வதா. *************** தான் வரைந்த ஓவியத்தை கடைசியாக ஒரு முறை சரி செய்யும் ஓவியனைப்போல நீ ஒவ்வொரு முறையும் சரிசெய்கிறாய் உன் உடையை. *************** இலைகள் காய்ந்தால் உயிர் உள்ள கொடியும் பட்டுப் போகிறது. உன் உடைகள் காய்ந்தால் உயிரற்ற கொடியும்… Continue reading தேவதைகளின் தேவதை / தபு ஷங்கர் கவிதைகள்

வானம் / தபு ஷங்கர் கவிதைகள்

நீ எப்போதும் தலையைக் குனிந்தே வெட்கப்படுவதால் உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம் இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க முடிகிறது! ஒரேயரு முறை கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி வெட்கப்படேன்… வெகுநாட்களாய் உன் வெட்கத்தைத் தரிசிக்கத் துடிக்கிறது வானம்!

நான் ஒரு குடுகுடுப்புகாரன் / தபு ஷங்கர் கவிதைகள்

என்னை ஒரு குடுகுடுப்பைக்காரனாய் நினைத்துக்கொண்டு ஓர் அதிகாலையில் உன் வீட்டுமுன் நின்று இந்த வீட்டில் ஒரு தேவதை வாழ்கிறது என்று கத்திவிட்டு குடுகுடுவென நான் ஓடிவந்திருக்கிறேன்.

காதல் எனக்குள் ஊட்டியதுதான் இந்த வாழ்க்கை / தபு ஷங்கர் கவிதைகள்

ஒரு தாய் தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில் நிலவைக் காட்டுவது மாதிரி காதல் எனக்கு உன்னைக் காட்டியது. குழந்தை பரவசமாய் நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் தாய், தன் குழந்தையின் வாய்க்குள் உணவை ஊட்டுவது மாதிரி நான் உன்னைப் பரவசமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கையில்… காதல் எனக்குள் ஊட்டியதுதான் இந்த வாழ்க்கை