மனவிளிம்புகள் சுருண்டுருண்டு ஓர் ஊதலின் வெளியாய் மடிவதில் சுவாசமும் புகைகிறது
யானுமிட்ட தீ / குட்டி ரேவதி கவிதைகள்
அவளை அப்படியே விட்டிருக்கலாம் நீங்கள் முட்டும் இரவைக் கானகத்தின் முதுகென்றும் மெல்ல திரளும் உதிரப்பெருக்கைக் கடலென்றும் கனலும் காமத்தைக் காயும் நிலவென்றும் உங்களுக்கான பிரபஞ்ச நீள்வட்ட வலயத்தை மறுக்கிறாள் மெளனிக்கிறாலென்பதைக் கூறிக்கொள்கிறேன் உடலெங்கிலும் ஆயுதம் புதைத்த வனமாகியவள் என்றறியாமல் அம்பெய்தின உங்கள் கைகள் வழியெங்கும் சமிக்ஞைகளால் அவளெழுப்பிய வேட்டை அம்புகளால் கிடங்குகளுக்குள் சேகரப்படுத்திய வெடிமருந்துருண்டைகளால் உம்முடல் வெடித்துச்சிதறலாம் எதிர்பாராத ஒரு காலையில் தொடைகளுக்கு இடையே விரியும் கானகப்பாதை பால்வெளியாக நீளும் என்றுஅவள் வானம் வரைந்தாலும் உருண்ருண்டு ஓடும்… Continue reading யானுமிட்ட தீ / குட்டி ரேவதி கவிதைகள்
பிரசவம் / குட்டி ரேவதி கவிதைகள்
நீர்ப்பாத்தியில் நிழலேதும் வேண்டாது தாவர இச்சையின் மிடுக்குடன் எழும் திரண்ட கவர்ச்சியின் வாழை யான் குலைதள்ளும் நாளில் வெட்டிச் சாய்த்தது உமது அரிவாள் தோலுரித்தது உடல் கிழித்தது என்றாலும் காலைச் சுற்றிலும் கணுக்கால் உயரத்தில் மீண்டும் மீண்டும் முளைத்தெழும் என் கம்பீரத்தோகைகள்
மீன்தொட்டி / குட்டி ரேவதி கவிதைகள்
மென்னுதடுகள் பேசும் மீன்குஞ்சுகள் வளையவரும் தொட்டியாய் இருந்தேன் இரவு பகல் எழுச்சியுறும் கடலில்லை பழம்பெரும் பாசிபடர்ந்த கூழாங்கற்களை உருட்டிக் கொரித்தது குஞ்சின்பசி குத்துயிர்க்கனவுகள் உடலை முட்டும் உயிர்ப்பற்ற குமிழிகள் மேடுதட்டும் ஓர் இரவும் அதனோடவியும் உம் ஆண்மையும் கடலாக்கியது என்னை சுவரை எட்டியுதைத்தன என்குஞ்சுகள்…
விஷ கன்னிகையின் காமநொதி – இறுதி விருந்து – முலைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
நட்சத்திரங்கள் பொடிந்து உதிரும்படியாக இரவு அதிர்கிறது கனவு பிரமாண்டமாகையில் விஷமாய் இரசாயனம் மாறிக்கொண்டிருக்கிறது வழிய இயலாத கண்ணீரும் இருளில் மக்கும் கனவுகளும் இவரா அவரா எனத்தீண்டிப் பார்க்கின்றன சுருண்டு தவிக்கும் காமத்தின் நீலநரம்புகள் எனது ஒவ்வொரு வார்த்தையையும் கூர்மையாகச் சீவுகிறேன் பற்களினூடே நுரையீரலுக்குள் காற்றின் புயல் இருதயத்துக்குள் ரத்தத்தின் சுழல் மார்புகள் கனிந்து தொங்குகின்றன அதன் இரு கிண்ணங்களிலும் திடமான விஷம் திரண்ட ஒவ்வொரு துளிவிஷமும் மலையைக் குடையக் கூடியது இந்த விருந்தின் சுவையானதொரு பதார்த்தமாய் உன்… Continue reading விஷ கன்னிகையின் காமநொதி – இறுதி விருந்து – முலைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன – முலைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள்… வாழ்க்கையே… இந்த ஒரே ஒரு வாழ்க்கைக்குள் மலை முகட்டிலிருந்து ஒரு சிறு பாறையென என்னை உருட்டித் தள்ளிவிடு துயரங்கள் எழும்பி அடங்கும் கடலுக்குள் உணர்ச்சிகளில் உடலை நீந்தவிடு சிதிலங்களின் மறைவில் வாழப்பணி முலைகள் பூக்கத் தொடங்கும் போது பருவத்தின் படகில் வந்து மிதந்து பறித்துச்செல் மலைகளின் உடலுக்குள்ளிருந்து புறப்படும் மிருகங்களின் வாயினைச் சந்திக்கவை இரத்தம் சூடாகிப் பிளிறும்போது கண்ணாடிகளை அழைத்துவா எதிரில் நெருப்புக்கங்குகளான எனது வார்த்தைகளாலேயே என்னைச் சாம்பலாக்கித் தூவிவிடு பிசாசுகள்… Continue reading உடல் நன்று புலன்கள் மிகவும் இனியன – முலைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
ஆண் உடல் ஒரு பிரமை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
உனது கண்களின் போதை அகலப்பாய்ந்து என்னுள் உதிரத்தின் பேரருவி என்புக்குள் சீறிப்பாய தீண்ட ருசிக்கும் எனது பார்வைகள் உன்னில் பதியனிடும் வரலாற்றின் தண்டுகள் உனது வார்த்தைகள் என்னுள் நிரம்பி மூலத்தில் மெளனமாய்ச் சுருள்கின்றன நீ மெளனத்தை இரு துண்டுகளாகக் கிழித்து என் மீதெல்லாம் மழையடிக்கிறாய் பின் இறுகிய தரையில் ஒன்றிரண்டாய் அதன் கனத்த துளிகள் வீழும் சப்தம் நீண்ட நேரம்… பருவத்தின் பின் பருவமாய்க் காலம் இழுத்துச் செல்லும்போது விடுதலைக்கான கதறல் அழைத்து வந்தது என்னை உனது… Continue reading ஆண் உடல் ஒரு பிரமை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
இறுதியாக ஒரு முறை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
இதயக்கமலங்கள் மலரும் மாலைப்பொழுது ஓர் உறவின் முறிவைப் போல் சடாரென்று விழுந்து நொறுங்கிப் போகின்றன சூரியனின் கைகள் மேற்கே தெருவெங்கும் கூச்சமிழந்த பெண்களின் சிரிப்பொலிகள் வாணவேடிக்கைகளாய் வெடித்து ஓய்கின்றன நிசப்தம் ஜன்னலையும் கதவுகளையும் சாத்தும்போது அவள் அன்று ஐந்தாம் முறையாகக் களைப்புற்றிருந்தாள் ‘சுவர்களையெல்லாம் உடைத்துக் கொண்டு வெளியேற வேண்டும். ஆடைகள் எதுவும் தடுக்காது நகரத்தின் மைய வீதி வழியே ஓடிக் கொண்டே இருக்கவேண்டும் பருவம் காலம் இடம் மனிதர் பேதமின்றி ஒரு பழைய ஞாபகத்தின் தொங்குபாலமும் வேகத்தைக்… Continue reading இறுதியாக ஒரு முறை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
சூல் – உயிருடலின் பேரற்புதமான பணி – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்
பாம்போடு பாம்பு பிணையும் அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும் வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும் உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ முட்டை மீது முட்டையடுக்கி அவயங்காக்கும் மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு உடல் விரித்து ஆனந்திக்கும் உயிரிழுத்துப் போட்ட பின்னும் கண் துஞ்சாமல் சூல் கொள்ளும் பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும் உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும் ஆணொன்று விரட்டிப் புணர உடலெல்லாம் கருக்கொள்ளும் வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத் தாய் மரிக்கும் உடலின் சிறகடியில் நினைவு குவித்து… Continue reading சூல் – உயிருடலின் பேரற்புதமான பணி – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்
யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்
உனது நினைவின் மதகு ஒரு மழைக்காலத்தின் வருகையை அறிவிப்பதாய்ப் பெருகி வீழ்கிறது என் வெயில் பிரதேசமெங்கும் கொஞ்சமும் தளராத வேட்கையுடன் நுரை சுழித்த திமிரில் எனது பூமியில் குழிபறிக்கிறது அது ஒரே நாளை ஆயிரம் முறைகள் வாழநேர்ந்ததாய்ச் சலிப்பூட்டும் அதிகாலைகளைக் கசக்கி எறிகிறது குகையினூடே ஒளி துளைக்கும் அதன் சீற்றத்தின் கொதிப்பு உணர்ந்தும் கைகள் பொசுங்க அள்ளிப் பருகுகிறேன் நெடிய மரங்களினூடே அலையும் என் பார்வை ஓர் அற்புதமான குறிஞ்சிப்பூவைக் கண்டுகளிக்கிறது தொடுவானத்தை இடித்துவிடாமல் இருக்கட்டும் நமது… Continue reading யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்