விஷ கன்னிகையின் காமநொதி – இறுதி விருந்து – முலைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

நட்சத்திரங்கள் பொடிந்து உதிரும்படியாக
இரவு அதிர்கிறது
கனவு பிரமாண்டமாகையில்

விஷமாய் இரசாயனம் மாறிக்கொண்டிருக்கிறது
வழிய இயலாத கண்ணீரும்
இருளில் மக்கும் கனவுகளும்

இவரா அவரா எனத்தீண்டிப் பார்க்கின்றன
சுருண்டு தவிக்கும் காமத்தின் நீலநரம்புகள்

எனது ஒவ்வொரு வார்த்தையையும்
கூர்மையாகச் சீவுகிறேன் பற்களினூடே

நுரையீரலுக்குள் காற்றின் புயல்
இருதயத்துக்குள் ரத்தத்தின் சுழல்

மார்புகள் கனிந்து தொங்குகின்றன
அதன் இரு கிண்ணங்களிலும்
திடமான விஷம்

திரண்ட ஒவ்வொரு துளிவிஷமும்
மலையைக் குடையக் கூடியது

இந்த விருந்தின் சுவையானதொரு பதார்த்தமாய்
உன் கோப்பையில் நிறைந்திருக்கிறேன்.

இனி நீ சுவைக்கலாம் என்னை…!!!