உடலெங்கும் நீர்மொக்குகளுடன் அவள் எழும்பிவருகையில் ஒரு மொக்கும் முறியாது நாவினால் பறித்துக் கனிகளாக்கி உண்பேன் நீரலை கரையேறிச் சறுக்குவதைப் போல அவள் இதயத்தின் பெருஞ்சுவாசம் மார்புகளின் மீது அலையெனப் புரண்டடங்கும் உள்ளங்கைகளை அகலவிரித்து இலையின் குழிவோடு உந்தியை விரித்துக்கொடுப்பாள் ஒரு கிளி கவ்வியிருக்கும் கனியைப் போல தன்னுடலைத் தானே ஏந்திவந்து என்னிதழுக்குள் வழங்குவாள் ஒருவரது பரவசத்தின் தேநீரை மற்றவர் குடித்துக் களிப்போம் நிரம்பப் புகையும் கூந்தலுக்குள் மூழ்கி திசை குழம்பி மூச்சுத்திணறி மீளுவேன் நான் கால்தடங்களால் தரையெங்கும்… Continue reading முலைகள் நான்கு – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்
குளிர்ந்த விதை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
ஏற்கெனவே இதயத்தின் கனிவான சதைப்பகுதிகளையெல்லாம் அவன் தின்று தீர்த்திருந்தான். விதையைத் தரிசுநிலப் பாழ்வெளியில் விட்டெறிந்தான். முன்னோர்களின் எச்சம் என்னோடு தீர்ந்துவிடாதபடிக்கு ஆயிரமாயிரம் மரங்கள் பருவமெய்துவதற்கான ஊட்டத்தை எனது கால்களுக்கிடையே ஒளித்து வைத்திருந்தேன் எறும்புகளும் சுவைத்திடா வண்ணம் ஓட்டை வலியதாக்கிக் கொண்டேயிருந்தேன் தளிரற்ற மரக்கிளையில் பறவைகள் வந்தமர்வதில்லை சூரியன் ஒளியை வெப்பமாய் எங்கெங்கும் ஊற்றிக் கொண்டிருந்தான் அவ்வழியே களைப்பாறிய எருமை சொரசொரப்பான தனது நாவால் எனை முழுதுமாய் விழுங்கியது அதன் சீரணமண்டலம் குளிரூட்டியது சிறிதும் சேதமிலாது வெளியே பாய்ந்தேன்… Continue reading குளிர்ந்த விதை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
ஆண்மை இல்லை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்
அன்று மழையோ மழை நதியின் மீதெல்லாம் மழைக்குஞ்சுகள் அடிவயிற்றின் பயிர்மேடு பரவசத்தில் சிலிர்த்து எழ ரம்மியமான மந்தகாசப் புன்னகையை உடலெங்கும் நழுவவிட்டபடி மழை தரையிறங்கியது நனைந்து உடலொட்டிய பாவாடையை உயர்த்தி நின்றது காடு ஓய்ந்த மழையை அம்மாவின் சொல் மீறித் திமிறிப் பறந்த பறவை சொன்னது நினைவுகளின் தடயங்களை மழையால் அழிக்கமுடிவதில்லை பகல் முழுதும், பின்னும் அதன் பாடல் ஓயவேயில்லை மகரந்தச்சேர்க்கைக்குப் பின் தளும்பும் மலர் சோர்வுடன் பூமியில் எங்குமே ஆண்மையில்லை
நிர்வாணம் – நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம் / குட்டி ரேவதி கவிதைகள்
உனக்கும் எனக்கும் அவளுக்கும் நிர்வாணம் தான் பளபளக்கும் ஆயுதம்; குருதியின் வியர்வையில் நனையும் போதெல்லாம் ஒரு பயிற்சியின் முழுமையை அடைகிறது மரங்கள் நிர்வாணத்தை யடையும் போதுதான் இறக்கைகள் துளிர்க்கும் பறவைகளாயின சீனப் போர்வீரன் சொல்லுவான்: ‘உறையிலிருந்து ஒரு பொழுதும் வாளை வெளியே இழுக்காதே அவசியமின்றி’ நிர்வாணம் வளர வளரத் தீயின் கொழுந்தைப் போல். நிர்வாணத்துடன் வாழ்வது எளிதன்று அது உன்னை அலைக்கழிக்கும் உபயோகிக்கும் வாய்ப்பைத் தேடி வாளை ஒரு போதும் வெளியே இழுக்காதே அவசியமின்றி அது துருப்பிடித்துச்… Continue reading நிர்வாணம் – நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம் / குட்டி ரேவதி கவிதைகள்
நம்மை அது தப்பாதோ? / ஞானக்கூத்தன் கவிதைகள்
1. ஓர் ஏழையின் சிரிப்பில் அவனது அப்பாவைப் பார்த்தேன் அவரும் ஓர் ஏழைதான் அவரது சிரிப்பில் அவரது மனைவியைப் பார்த்தேன் அவளும் ஓர் ஏழைதான். அம்மா அப்பா பிள்ளை மூன்று பேரும் தனித்தனி யாக நாடு நாடாகப் பாசி மணிகளும் கருமணிகளும் ஊசிகளும் விற்றார்கள். மான் கொம்பும் புலிப் பல்லும் விற்றார்கள் எருமைக் கொம்பில் செய்த சின்னப் பல் பெரிய பல் சீப்புகளும் விற்றார்கள் நிறைய சம்பாதித்து நாடு திரும்பினாள் அம்மா அவளைப் பார்த்து சிரித்தார் அப்பா… Continue reading நம்மை அது தப்பாதோ? / ஞானக்கூத்தன் கவிதைகள்
சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு / ஞானக்கூத்தன் கவிதைகள்
மருத்துவ மனையில் படுத்திருந்தான் தலையில் கட்டுடன். நர்ஸ் வந்தாள்; ஊசி போட்டாள். நான்கைந்து மாத்திரைகள் தந்தாள். போனாள் வழக்கம் போல அன்றும் அந்தக் கதவை அவன் பார்த்தான். அடுத்த நிமிஷம் அந்தக் கதவு விழுந்தே விட்டது அவன் மேல். அந்தத் தெருவில் அவ்வீட்டைக் கடந்து சென்ற ஒவ்வொரு நாளும் அவன் அதைப் பார்த்தான். மேலே இரண்டு கீழே இரண்டென்று நான்கு கதவுகள் கொண்ட மாடிப் பக்கத்து ஜன்னல் பச்சை வண்ணம் பூசப்பட்ட சதுர ஜன்னல். ஜன்னல்களில் ஒன்று… Continue reading சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு / ஞானக்கூத்தன் கவிதைகள்
உயர் மாகடல் உற்றொரு / ஞானக்கூத்தன் கவிதைகள்
சென்னை நகரத்தைச் சுற்றிப் பார்க்க வந்தவன் போலிருந்தான் கட்டியிருந்த வேட்டியை முழங்கால் வரைக்கும் உயர்த்தியிருந்தான் சாதாரணமான ஒரு சட்டை ஒரு விலங்கின் வயிற்றை நினைவூட்டி அவன் தோளில் தொங்கியது ஒரு பை கடலைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம் எதிரில் வந்தாரை எல்லாம் வழிகேட்டு கடல் வந்தடைந்த சந்தோஷம் கடலை நோக்கி அவன் பாடினான் ஒரு ஊரின் அருமை பெருமை பற்றி கடலிடம் சொல்லிக் கொள்ளும் ஒரு பாட்டு கடலை நோக்கிக் கையைச் சுட்டியும் உயர்த்தியும் அஞ்சலி செய்தும்… Continue reading உயர் மாகடல் உற்றொரு / ஞானக்கூத்தன் கவிதைகள்
திருப்தி / ஞானக்கூத்தன் கவிதைகள்
சஞ்சிகையைப் பிரித்தான். அங்கே முப்பதாம் பக்கத்தைப் பார்த்தான். இரண்டு வரிகளில் ஒருகவிதை. அதற்குக் கீழே இருந்த பெயரைப் படித்ததும் அவனுக்கு ரத்தம் கொதித்தது. கவிதை எல்லோரும் நல்லவரே அவரவர் நாட்டில் அவரவர் வாழ்ந்திருந்தால் இரண்டு வார்த்தை ஆசிரியர்க்கு எழுதிப் போடணும் ஆனால் ஒன்றைப் பற்றி மட்டும் எழுதினால் நன்றாய் இருக்காது. தெரிந்து விடும் எனவே எழுதினான். சென்ற இதழில் கொய்ராலா படத்தைப் போட்டு அசத்திவிட்டீர் வாசுவின் எழுத்தில் முதிர்ச்சி கண்டேன். இறைச்சி கவுச்சி ஓரினப்புணர்ச்சி பற்றிய கட்டுரை… Continue reading திருப்தி / ஞானக்கூத்தன் கவிதைகள்
நிர்மலம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
வருகிறான் அவன் யார்? சவரத் தகடா? புதிய பல்பொடியா? இன்னதென்று நினைவில் இல்லை. என்னிடம் விற்க முயன்று, வாங்கப் படாமல் திரும்பிப் போகிறான் அவன் யார்? போகும் திசையில் நிற்கறான் நடக்கிறான் தயங்கிப் போகிறான் கண்ணுக்குக்கீழ் தலைப்பில் குத்திய ஐம்பது காசுப் பேருந்துச் சீட்டுப் போல என்னவோ சுருக்கம் பார்வையைக் கவரும். இடது கையில் ஏதோ பெட்டியைச் சுமப்பது போன்ற பாவனை. நிற்கிறான் நடக்கிறான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன் வேங்கட ரங்கம் பிள்ளைத் தெருவின் வால்போல்… Continue reading நிர்மலம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஐந்து கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
1. என் வீட்டுச் சுவரில் எவரோ எழுதிய இரட்டை இலைமேல் கம்பளி பூச்சி 2. அரசியல் வாதிதான் பாரத ரத்னம் மற்றவரெல்லாம் டீக்கடை ரத்னம் 3. நிறைய பலாப்பழம் போகிற தென்றான் சிறுவன் ஒருவன். திரும்பிப் பார்த்தேன் போய்க் கொண்டிருந்தது கூச்சலிடாத மோடா வியாபரி 4. தட்டான் பூச்சிகள் தோட்டத்தில் சுற்றக் கண்டு கிட்டாத இன்பம் கிட்டிய தென்ன – கண்ணபெருமானே. 5. பச்சைத் தழையுடன் நின்றிருந்த மரத்தில் காற்று புகுந்தது. எண்ணி எண்ணி துறக்கிறாற் போல… Continue reading ஐந்து கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்