ஏலேலோ / ஆவுடை அக்காள் கவிதைகள்

ஆசை என்னும் ஏலேலோ – அரும்புவிட்டு அயிலேலோ

கோசம் என்னும் ஏலேலோ – கொழுந்துவிட்டு அயிலேலோ

மோட்சம் என்னும் ஏலோலோ – மொட்டுகட்டி அயிலேலோ

போதம் என்னும் ஏலோலோ – பூப்பூத்து அயிலேலோ

புத்தி என்னும் ஏலேலோ – பிஞ்சுவிட்டு அயிலேலோ

காமம் என்னும் ஏலேலோ – காய்காத்து அயிலேலோ

கருணை என்னும் ஏலேலோ – காவலிட்டு அயிலேலோ

பக்தி என்னும் ஏலேலோ – பழம்பழுத்து அயிலேலோ”