என்ன கேட்டாய்? உன் வீட்டில் என்ன செய்தாய்? ஏதெடுத்து என்ன பார்த்தாய்? எதைக் கிழித்து வாங்கிக் கொண்டாய் அடி உதைகள்? கெட்டுப்போன பிள்ளைக்கு வெளியில் கிடைக்கும் அடி உதைகள் கெட்டுப் போகாப் பிள்ளைக்கு வீட்டில் கிடைக்கும் முன்கூட்டி அவர்கள் அவர்கள் பங்குக்கு உதைகள் வாங்கும் காலத்தில் உனக்கு மட்டும் கிடைத்தாற் போல் சின்னக் கண்ணா அலட்டாதே.
தொழுநோயாளிகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஐயா உம் விரல்கள் மூன்று கிடந்தன. பெற்றுக் கொள்ளும் அம்மணி உனதும் கூட கால்களின் செதில்கள் அங்கே கிடப்பதைக் கண்டேன். உங்கள் உடம்பினை ஏனிவ்வாறு உதிர்க்கிறீர் தெருவிலெங்கும்? கங்கையில் விருப்பைக் கொஞ்சம் கைவிடச் சொன்ன நூல்கள் கேணியில் உடம்பைக் கொஞ்சம் கைவிடச் சொன்னதுண்டா? வெள்ளிக்கு முதல் நாள் ஊரை வலம் வரும் தங்கட்கின்னும் உடைமையில் கவனம் வேண்டும் அம்மணி தங்கள் மேனி சிந்தினால் யாருக்காகும்?
ஒட்டகம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஆயிரம் முறைகள் எண்ணிப் பார்த்தபின் முடிவு கண்டேன் ஒட்டகம் குரூபி இல்லை குரூபிதான் என்றால் மோவாய் மடிப்புகள் மூன்று கொண்ட அத்தையும் குரூபி தானே? அத்தையைக் குரூபி என்றோ ஒருவரும் சொல்வதில்லை சண்டைகள் வந்தாலன்றி சண்டைகள் வந்தபோது மற்றவர் அழகில் குற்றம் பார்ப்பது உலகநீதி ஒட்டகம் குரூபி என்றால் அதனுடன் உலகுக் கேதும் நிரந்தரச் சண்டை உண்டோ?
கனவு / ஞானக்கூத்தன் கவிதைகள்
மலைகள் என்னும் குறும்பற்கள் முளைத்திராத பூதலத்தின் கொக்குப் போலக் காலூன்றி நிற்கும் மரங்கள். அதற்கப்பால் எழுந்து வீழ்ந்து தடுமாறும் நடக்கத் தெரியாக் கடலலைகள் யார் சென்றாலும் விரல் நீட்டும்.
தலையணை / ஞானக்கூத்தன் கவிதைகள்
விழுவதால் சேதமில்லை குலுக்கினால் குற்றமில்லை மூலைகள் முட்களல்ல உருவமோர் எளிமையாகும் வாழ்க்கையில் மனிதன் கண்டு பிடித்ததில் சிறந்ததாகும் தலையணை. அதற்குள் ஒன்றும் பொறி இயற் சிக்கல் இல்லை பாயில்லை என்றால் வேண்டாம் தலையணை ஒன்றைப் போடும்
சைக்கிள் கமலம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான் மைதானத்தில் சுற்றிச் சுற்றி எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள் தம்பியைக் கொண்டு போய்ப் பள்ளியில் சேர்ப்பாள் திரும்பும் பொழுது கடைக்குப் போவாள் கடுகுக்காக ஒரு தரம் மிளகுக்காக மறு தரம் கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள் வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும் வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும் இறங்கிக் கொள்வாள் உடனடியாக குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள் எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை எங்கள் ஊர்க்கமலம்… Continue reading சைக்கிள் கமலம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
யெதிரெதிர் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
கண்ணிமையாக் கால்தோயாத் தேவர் நாட்டில் திரிசங்கைப் போகவிட மாட்டேன் என்று ஒருமுட்டாள் சொன்னதுபே ராபத்தாச்சு தன்னாளைத் திருப்பியதும் விஸ்வா மித்ரன் கொதித்தெழுந்தான். பிரம்மாவுக் கெதிர்ப்படைப்புத் தான் செய்வே னென்று சொல்லி ஆரம்பித்தான் கண்ணிமையாக் கால்தோயாத் தேவரெல்லாம் ஓடிவந்தார் கடவுளுடன். வேண்டாமென்று முனிவர்களில் மாமணியைக் கெஞ்சிக் கேட்டார். சினம்தணிந்தான் தவஞானி. ஆனால் அந்தக் கணம்மட்டும் படைத்தவைகள் உலகில் என்றும் இருந்துவர வேண்டுமென்றான். வரமும் பெற்றான் அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு: மயிலுக்கு… Continue reading யெதிரெதிர் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஸ்ரீலஸ்ரீ / ஞானக்கூத்தன் கவிதைகள்
யாரோ முனிவன் தவமிருந்தான் வரங்கள் பெற்றான் அதன் முடிவில் நீர்மேல் நடக்க தீபட்டால் எரியாதிருக்க என்றிரண்டு ஆற்றின் மேலே அவன் நடந்தான் கொடுக்குத் தீயைச் சந்தனம் போல் உடம்பில் பூசிச் சோதித்தான் மக்கள் அறிந்தார் கும்பிட்டார் மறுநாள் காலை நீராட முனிவன் போனான் ஆற்றுக்கு நீருக்குள்ளே கால்வைக்க முடியாதவனாய்த் திடுக்கிட்டான் கண்ணால் கண்டால் பேராறு காலைப் போட்டால் நடைபாதை சிரித்துக் கொண்டு கண்ணெதிரே ஆறு போச்சு தந்திரமாய் காலைக் குளியல் போயிற்றா கிரியை எல்லாம் போயிற்று வேர்த்துப்… Continue reading ஸ்ரீலஸ்ரீ / ஞானக்கூத்தன் கவிதைகள்
உயர்திரு பாரதியார் / ஞானக்கூத்தன் கவிதைகள்
சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில் பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப் பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார் சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில் சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான் எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான் மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத் துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக் கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும் கலைகின்ற கூட்டத்தின்… Continue reading உயர்திரு பாரதியார் / ஞானக்கூத்தன் கவிதைகள்
அன்று வேறு கிழமை / ஞானக்கூத்தன் கவிதைகள்
நிழலுக்காகப் பாடையின் கீழ் பதுங்கிப் போச்சு நாயொன்று பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில் கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி காலால் உதைத்தான். நாய் நகர மேற்குக் கோடிப் பிணந்தூக்கி எட்டி உதைத்தான். அது நகர தெற்குக் கோடிப் பிணந்தூக்கி தானும் உதைத்தான். அது விலக வடக்குக் கோடிப் பிணந்தூக்கி முந்தி உதைத்தான். இடக்கால்கள் எட்டா நிலையில் மையத்தில் பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி நான்கு பேரும் இடக்காலை நடுவில் நீட்டப் பெரும்பாடை நழுவித் தெருவில் விழுந்துவிட ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்… Continue reading அன்று வேறு கிழமை / ஞானக்கூத்தன் கவிதைகள்