சூளைச் செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது.
பார்த்தல் / ஞானக்கூத்தன் கவிதைகள்
கூடைக்காரி சிலசமயம் குடும்பக்காரி வரும் தெருவில் டீச்சர் வந்தாள் குடைவிரித்து. …… ஒற்றைமாட்டு வண்டியிலே …… வைக்கோல் பாய்க்கு …… நெளிந்து தரும் …… மருத்துவச்சி தேடுகிறாள் …… எட்டிப் பார்த்து ஒரு வீட்டை விளக்குக் கம்பம் நடைக் கொம்பாய் நிற்கும் தெருவில் பிறபெண்கள் வந்தார் போனார் அவள் வரலே.
அந்திமம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய் மரம் பட்ட சாலைக் கென்னை அனுப்பு முன் பேரைக் கொஞ்சம் சோதித்துப் பாருங்கள் ஸார்.
பவழமல்லி / ஞானக்கூத்தன் கவிதைகள்
கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக் கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத் தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு விசிறியதும் அவரோடு வீடு தூங்கும் பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும் தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத் தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?
கனவின் மனிதன் / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஒருவனைக் கனவில் கண்டேன் உதடுகள் பற்கள் கண்கள் தலைமயிர் நகங்கள் கை கால் அனைத்துமே மனிதன் போல இருந்திடும் அவனைக் கண்டேன் கனவிலும் மனிதன் போலத் தோன்றினால் மனிதன் தானா?
அந்தத் தெரு / ஞானக்கூத்தன் கவிதைகள்
சூத்திரர் தெருக்களென்று சொல்லுவார் ஏற்றாற்போல மாட்டுத் தோல் உலரும் ஆடு கோழிகள் நாய்கள் வாழும் முருங்கைகள் பிள்ளை வாதக் கிளைகளைத் தாழ்த்திக் கொண்டு குடிசையின் வாசற்பக்கம் ‘பசுபதி ஆறாம் பாரம்’ என்கிற சாக்குக் கட்டி எழுத்துக்கள் தெரியும் குச்சு இடச்சாரி பெரியகுச்சு மல்லிகை முல்லை சாணி முட்டைகள் முருங்கைக் காய்கள் விற்கிற பழக்கமுள்ள வீடுகள் ஆங்காங்குண்டு தனிப்பட வர மாட்டாமல் கடவுளின் துணையில் அங்கே வருகிறான் பார்ப்பான் சாமி வலம் வர வேதம்பாடி.
எழுதக் குவிந்த / ஞானக்கூத்தன் கவிதைகள்
எழுதக் குவிந்த கைபோல இருக்கும் குன்றில் ஒருபாதை மூட்டு தோறும் நீர்க் கசிவு மணிக்கட்டோரம் விளை சகதி சகதிப் பக்கம் ஒரு சப்தம் உளியின் சப்தம் செவியில் விழும் தாவும் அணிலின் முதுகின் மேல் இராம பிரானின் கைவுரல்கள் இடை வானத்தில் துணையாகும் உளியின் சப்தம் மலை முழைஞ்சில் உதிக்கும் போது ஓராண்டு கேட்கும் போது நூறாண்டு
நாள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
கொட்டிக் கொண்டு போயேன்’டா தட்டு கொண்டு வாயேன்’மா தொட்டுக் கொள்ளப் போடேன்’மா கட்டை விரலைத் தொட்டுக்கொள் பள்ளிக்கூடம் போறேன்’மா பாதை பார்த்துப் போய் வாடா கையில் கட்டித் தருவாயா கையைக் கனக்கும் வேணடாம்’டா மத்தியானம் வருவேன்’மா வெயிலில் வெந்து சாகாதே மத்தியானம் வருவேன் நான் பத்துப்பானை தேய்ப்பதற்கா?
விடுமுறை தரும் பூதம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஞாயிறு தோறும் தலைமறை வாகும் வேலை என்னும் ஒரு பூதம் திங்கள் விடிந்தால் காதைத் திருகி இழுத்துக் கொண்டு போகிறது ஒருநாள் நீங்கள் போகலை என்றால் ஆளை அனுப்பிக் கொல்கிறது மறுநாள் போனால் தீக்கனலாகக் கண்ணை உருட்டிப் பார்க்கிறது வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல் வீட்டில் ஒருவர் நலமில்லை என்னும் பற்பல காரணம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது வாரம் முழுதும் பூதத்துடனே பழகிப் போன சிலபேர்கள் தாமும் குட்டிப் பூதங்களாகிப் பயங்கள் காட்டி மகிழ்கின்றார் தட்டுப்… Continue reading விடுமுறை தரும் பூதம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
பட்டிப் பூ / ஞானக்கூத்தன் கவிதைகள்
தையற்காரன் புறக்கணித்த — புது வெள்ளைத் துணியின் குப்பைகள்போல் பட்டிப் பூவின் வெண்சாதி — அதைப் பார்த்தால் மனசு நெக்குவிடும் காய்ச்சல் நீங்கிக் கண்விழிக்கும் — ஒரு கன்னிப் பெண்ணின் முதல் சிரிப்பாய் பட்டிப் பூவின் கருநீலம் — அந்தப் படுகை எங்கும் மிகவாகும் எங்கும் வளரும் பட்டிப்பூ — தன் குடும்பத் தோடும் சூழ்ந்திருக்கும் செவியின் மீதில் ரோமம் போல் — அது தனித்தும் வளரும் இப்போது முலைகள் அசையத் தான் அசையும் — ஒரு… Continue reading பட்டிப் பூ / ஞானக்கூத்தன் கவிதைகள்