மருதம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

ஊருக்கெல்லாம் கோடியிலே முந்திரிக் கொல்லே உக்காந்தால் ஆள்மறையும் முந்திரிக் கொல்லே செங்கமலம் குளிச்சுப்புட்டு அங்கிருந்தாளாம் ஈரச்சேலை கொம்பில் கட்டி காத்திருந்தாளாம் நாட்டாண்மைக்காரன் மகன் அங்கே போனானாம் வெக்கப்பட்டு செங்கமலம் எந்திரிச்சாளாம் நாட்டாண்மைக்காரன் மகன் கிட்டே போனானாம் வெக்கப்பட்டு செங்கமலம் சிரிச்சிக்கிட்டாளாம் உக்காந்தால் ஆள்மறையும் முந்திரிக் கொல்லே ஊருக்கெல்லாம் கோடியிலே முந்திரிக் கொல்லே.

தேரோட்டம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

காடெ கோழி வெச்சுக் கணக்காக் கள்ளும் வெச்சு சூடம் கொளுத்தி வெச்சு சூரன் சாமி கிட்ட வரங்கேட்ட வாரீங்களா ஆரோ வடம் புடிச்சி அய்யன் தேரு நின்னுடுச்சி கற்கண்டு வாழெ வெச்சு விருட்சீப் பூவ வெச்சுப் பொங்கல் மணக்க வெச்சு வடக்கன் சாமி கிட்ட வரங்கேட்ட வாரீங்களா ஆரோ வடம் புடிச்சி அய்யன் தேரு நின்னுடுச்சி இளநீ சீவி வெச்சு இரும்பாக் கரும்ப வெச்சுக் குளிராப் பால வெச்சுக் குமரன் சாமி கிட்ட வரங்கேட்டு வாரீங்களா தெரு… Continue reading தேரோட்டம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

உள் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

வயல்களைக் குளங்களென்று நினைத்திடும் மீனும் நண்டும் குசலங்கள் கேட்டுக் கொள்ளும் கொய்கிற அரிவாளுக்குக் களைவேறு கதிர்வேறில்லை என்கிற அறிவை இன்னும் வயல்களோ அடையவில்லை மீனுடன் நண்டும் சேறும் நாற்றிசைக் கரையும் பார்த்துக் குளத்திலே இருப்பதாகத் தண்ணீரும் சலனம் கொள்ளும் பறைக்குடிப் பெண்கள் போல வயல்களில் களைத்துத் தோன்றும் பெருவிரல் அனைய பூக்கள் மலர்த்தும் சஸ்பேனியாக்கள் படுத்தவை கனவில் மூழ்கி நிற்பவையாகி எங்கும் எருமைகள். அவற்றின் மீது பறவைகள் சவாரி செய்யும் சரி மனை திரும்பும் எருமைமேலே எவ்விடம்… Continue reading உள் உலகங்கள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

எட்டுக் கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

1 சாத்துயர் கேட்டுப் போகும் சுற்றத்தார் சாயல் காட்டிக் கழன்றது ரத்த வெள்ளம் குத்துண்ட விலாப்புறத்தில் அவர் பெயர் ஒன்றினோடு என்பெயர் ஒன்றிப் போச்சாம் படுக்கையில் தூங்கும் என்னைக் கந்தர்வர்கொன்று போனார் பெயரையே சொல்லிப் பார்த்து திகைக்கிறேன் எனக்கென் பேரே எப்படித் துரோக மாச்சு. 2 வெளியில் வந்தான் நடுநிசியில் ஒன்றுக் கிருந்தான் மரத்தடியில் நெற்றுத் தேங்காய் அவன் தலையில் வீழ்ச்சியுற்று உயிர் துறந்தான் ரத்தக் களங்கம் இல்லாமல் விழுந்த நோவும் தெரியாமல் தேங்காய் கிடக்கு போய்ப்பாரும்… Continue reading எட்டுக் கவிதைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

உள்ளோட்டம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

பூமியின் பிச்சைக்கார முகத்திலே ஒரு வெள்ளோட்டம் வயல்களில் தண்ணீரோட்டம் விளையாட்டுப் பிள்ளை ஓட்டம் புளியன் பூ வைத்தாயிற்று காவிப்பல் தெரிந்தாற் போல கிளைகளில் அக்கா பட்சி கூவின வெட்கத்தோடு தானொரு முதலை போலப் புதுப்புனல் ஆற்றில் ஓடும் ஊர்க்கூட்டம் கரையில் ஓட போகிறார் தலைக்குடத்தில் ஆற்றுநீர் துள்ளத் துள்ள நீர்மொண்ட குருக்கள் வர்ணக் குடையின்கீழ் ஈரத்தோடு கச்சேரி ஆசை உள்ள கோயிலின் மேளக்காரன் உற்சாகம் ஒன்றில்லாமல் தொடர்கிறான் ஊதிக்கொண்டு.

தவளைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

(1) தவளையின் கூச்சல் கேட்டுத் தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன் ஆயிரம் வருஷம் போச்சு போயிற்றா தவளைக் கூச்சல் மாதத்தில் ஒன்றைக் கண்ணன் மட்டுமா பிடிக்கும் என்றான் தவளைக்கும் பிடித்த மாதம் ஒன்றுண்டு பன்னிரண்டில் குளத்திலே இலைத் தண்ணீரில் குதூகலத் தவளைக் கூட்டம் குதித்திடும் கூச்சல் போடும் படித்துறை ஏறித்தாவும் நீர்மட்டத் தளவு தோன்றித் தாமதித்து நீரில் மீளும் தவளையின் வயிற்றைப் பார்த்தால் சந்தனக் கட்டி தோற்கும் கண் மறைவாக எங்கோ கதிரவன் தேர்க்கால் சிக்கி உருள்கிற சப்தம்… Continue reading தவளைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்

காலைநடை / ஞானக்கூத்தன் கவிதைகள்

வில்லைத்தகர எழுத்துகளால் வெட்டுப்பட்ட விளம்பரம் போல் நிலத்தின் மீது வயல்வரப்பு விடிந்த நாளின் முதல் சிகரெட் நெருப்பைத் தவிர மற்றெல்லாம் பச்சை பொலியும் செழும்பூமி தோப்புப் பனைகள் தொலைவாக தாழைப் புதர்கள் உரசாமல் நடக்கும் அவரைத் தெரிகிறதா? கையில் கொஞ்சம் நிலமுண்டு ஸ்டேஷன் மாஸ்டர் கொடிபோல உமக்கும் இருந்தால் தஞ்சையிலே நீரும் நடப்பீர் அதுபோல

நஷ்டக் கணக்கு / ஞானக்கூத்தன் கவிதைகள்

வாகனம் தூக்கிக் கொண்டு தீவட்டி பிடித்துக்கொண்டு வாத்தியம் இசைத்துக்கொண்டு பலூன்கள் விற்றுக்கொண்டு தெருக்காரர் ஊர்வலத்தில் இருப்பதால் நஷ்டப்பட்டார் எங்களூர் அரங்கநாதர்