மதுத்தாழி / குட்டி ரேவதி கவிதைகள்

என் உடலொரு மதுத்தாழி நுரைத்த மதுவை விளிம்பின் தருணம் வரை நிறைத்து வைத்திருப்பவள் தேனடையாய்த் தொங்கும் நிலவினும் கனம் நிறைந்த அதன் போதத்தைத் தூக்கிச் சுமக்கும் இனிய பருவம் என் இரவு மரத்தின் தேகத்தில் தனியே தொங்கும் அணிலின் நீண்ட நேர காத்திருப்பில் என் மதுத்தாழி நிறையும் தாழிக்குள் அடைந்து கிடக்கும் ஆழியை குடிக்க முடியாதெனும் திகைப்பில் அணில் நீண்ட நேரம் தனியே தலைகீழே மதுத்தாழி நிறையட்டும் போதையை ஏற்றிக்கொள்ள முடியாத அணில் தலைகீழே தொங்கட்டும் உருவத்தை… Continue reading மதுத்தாழி / குட்டி ரேவதி கவிதைகள்

நிலவின் பேரொளி / குட்டி ரேவதி கவிதைகள்

வானத்தின் பெருவெளியைப் பயணித்துத் தீராத ஒற்றை நிலவே தீரத்தின் குறியீடு நீ நிலாவே நீ நிறைத்து வைத்திருக்கும் மெளனம் இசையின் துல்லியத்துடன் என்னுள் இறங்குகிறது நம்மிடையே எவ்வளவு அகண்ட காலமும் வாழ்வும் உன் பேரழகில் மதி தெளியும் மதி அழியும் மதி உயிர்க்கும் என் ஒரே எதிரொளி நீ நீர் நழுவும் விரிந்த நதியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சத்தமில்லாமல் நீந்துகிறாய் எத்தனை காலத்தின் ரகசியங்களும் நினைவுகளும் தின்று தீர்த்த பின்னும் பறவையின் சிறகசையும் நகர்வில்… Continue reading நிலவின் பேரொளி / குட்டி ரேவதி கவிதைகள்

இந்தக் காதல் / குட்டி ரேவதி கவிதைகள்

இந்தக் காதல் இவ்வளவு வன்முறையான இவ்வளவு மென்மையான இவ்வளவு மிருதுவான இவ்வளவு நம்பிக்கையிழந்த இந்தக் காதல் பகல் பொழுதைப் போல் அழகாக வானிலை மோசமாக இருக்கும் போது மோசமாக இருக்கும் அந்த வானிலை போன்ற இவ்வளவு நிஜமான இந்தக் காதல் இவ்வளவு அழகான இந்தக் காதல் இவ்வளவு மகிழ்ச்சியான ஆனந்தமான மேலும் இவ்வளவு பரிதாபமானதுமான இந்தக் காதல் இருட்டிலுள்ள குழந்தை போல் பயந்து நடுங்கியும் ஆனாலும் இரவின் மத்தியிலும் நிதானமிழக்காத மனிதனைப் போல் தன்னைப் பற்றிய ஒரு… Continue reading இந்தக் காதல் / குட்டி ரேவதி கவிதைகள்

அவள் ஒரு பெருங்கானகம் / குட்டி ரேவதி கவிதைகள்

மரங்கள் கிளைத்த பெருவெளியை வானமாகக் கொண்ட அவள் ஒரு பெருங்கானகம் தேனீக்கள் மொய்க்கும் இரைச்சலில் அடைந்தொழுகும் மதுக்கலயத்தின் மலைமுகடுகள் அடங்காக் காதலின் பேரருவி அலையென வந்து வீழ மண்பரப்பில் படர்ந்து கிடக்கும் பசியகொடி உடலின் படம் திமிர்ந்தெழும் சீரிய பாம்பின் பொலிவு ஓயாமல் எழுதிக் கலையும் ஒளிக்கோலம் அவள் தவிப்புகள் வேரேன பாய்ச்சல் எடுத்து பூமியின் நீரோட்டம் அறியும் பச்சிலைகள் பட்டாம்பூச்சிச்சிறகுகளுடன் படபடக்கும் ஒரு பேரருவியின் கருணையைச் சேலை இழுத்து வந்து நிலம் சேர்க்கும் கடல் தேடிப்… Continue reading அவள் ஒரு பெருங்கானகம் / குட்டி ரேவதி கவிதைகள்

தட்டாமாலை – பாலியல் அரசியல் கவிதை / குட்டி ரேவதி கவிதைகள்

என் உடலை ஒவ்வொருமுறையும் காலியாக்குகிறேன் மதுவின் சேகரத்தில் சுழலத் தொடங்கும் போதெல்லாம் உடலை உனக்குள் கவிழ்க்கிறேன் உடலுக்குள் மீண்டும் மதுவின் சுரப்பு அமிழ்தத்தின் வேலை நாளங்களில் அதன் பாய்ச்சல் வேட்கையுடன் உன்னைத் தேடி உடலை உனக்குள் கவிழ்க்கிறேன் நீ மதுவைப் பருக மட்டுமே இயன்றவன் தட்டாமாலை சுழலும் உடலில் கைகோர்க்கத் தயங்கியவனிடம் மது வேலை செய்வதில்லை வெறும் கண்ணீரைப் போன்றதே அமிழ்தச் சுவையுடையது பெண்ணின் மதுவும் கைகோர்த்துக் கொள் மதுவின் வெப்பம் உன்னிலும் பரவி நீயும் சுழலுவாய்… Continue reading தட்டாமாலை – பாலியல் அரசியல் கவிதை / குட்டி ரேவதி கவிதைகள்

எத்தகைய பேருடல் இது – பாலியல் அரசியல் கவிதை / குட்டி ரேவதி கவிதைகள்

எத்தகைய பேருடல் எனது என வியக்கிறேன். எத்தனை ஆண் உடல்களை நான் சுகித்திருக்கிறேன் எத்தனை பெண் உடல்களை சீரணித்திருக்கிறேன் மில்லியன் வருடங்களுக்குப் பின்னாலும் இதோ என் யோனி வற்றாத முப்பெருங்கடலாய் அலைபாய்கிறது இன்று என் பேருடல் காற்றில் படபடக்கும் ஒரு வெள்ளைத்தாளைப் போல அலைகள் மீதூற மடிந்து விரிகிறது வெற்றுடலாய் இருக்கிறது தேவதைகளின் வார்த்தைகளால் நிரம்பிய முதுமையான தாழி இறக்கைகளை விரித்து தனக்கே வானம் செய்து கொள்ளும் பேரூந்து பெரும்பருந்து இனி எப்பொழுதுமே சாவமுடியாது யோனி மறைந்து… Continue reading எத்தகைய பேருடல் இது – பாலியல் அரசியல் கவிதை / குட்டி ரேவதி கவிதைகள்

உடலை விட்டு எப்படி வெளியேறுவது? / குட்டி ரேவதி கவிதைகள்

பகல் இரவு என்றில்லாது எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே நூறாண்டுகள் ஆயிற்று இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும் கடக்க வேண்டியிருந்தது மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும்… Continue reading உடலை விட்டு எப்படி வெளியேறுவது? / குட்டி ரேவதி கவிதைகள்

பிராண வேதனை – தனிமையின் ஆயிரம் இறக்கைகள் / குட்டி ரேவதி கவிதைகள்

விடாது ஒலிக்கட்டும் பேச்சிழந்த குரல்கள் புலமெங்கும் காற்றுவீச மரங்கள் உரச ஒலிகள் மோதிக் கலந்து பற்றி எரியட்டும் உனது மொழியின் பிராண வேதனை திடும்மென எழுந்த வெப்பத்தின் அதிர்ச்சியில் பொசுங்காதிருக்கட்டும் உனது இறக்கைகள் மேலெழுந்து உடலை இலேசாக்கி ஒரு விண்கலத்தைப் போல மிதவையாக்கிச் சுழல் சுழன்றுகொண்டே இருக்கட்டும் உனது உடல் நடனத்தில் மூர்ச்சையுற்றுக் கீழே விழாதிருக்க வேகமாய்ப் பயணி இப்பொழுதும் தீ அணையாதிருக்கட்டும் விடாது ஒலிக்கட்டும் பேச்சிழந்த குரல்களின் பிராண வேதனை

இங்கே ஒரு கவிதை – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

கடலை வரைந்தவள் அவளுக்குள் உயிருள்ள கடலொன்றை வரைந்திருக்கிறாள். எதிர்நோக்காப் பொழுதொன்றில் கொந்தளித்து உறங்கும் நகரத்தின் கரைகளை விழுங்கிவிடுகிறது கூந்தலின் அலைக்குள் மீன்கள் குதூகலமாய்க் கொந்தளிக்கின்றன பவளப்பாறைகளின் மடிப்புகளில் புனைவுகளில் விளையும் காலம் உறங்குகின்றது அவளது இதழ் நீலஒளி கீறிய புன்னகையுடன் இரவினை முத்தமிடுகின்றது உடலெங்கும் படர்ந்திருக்கிறது பெளர்ணமியின் ஈரஒளி அவளின் வனாந்தரத்தில் சங்குப்பூச்சிகள் மேய்கின்றன காலத்தின் சிந்தனையேயிலாது கடல் ஆமைகள் ஊமைப்பெண்களாய் அழகு சிந்த நோக்குகின்றன பார்வைக்குள் அடக்கியிருக்கும் பாடல்களை விடுவிக்க முடியாத ஏக்கம் ததும்ப அவளது… Continue reading இங்கே ஒரு கவிதை – உடலின் கதவு / குட்டி ரேவதி கவிதைகள்

மின்வெளி / குட்டி ரேவதி கவிதைகள்

திரைப்பரப்பை ஒளியூட்டி கடவுச்சொற்களை அனுப்பியதும் மெல்லிய முனகலுடன் அவ்வுலகின் கதவுகள் திறந்து கொள்ளுகின்றன தட்டையான உடலுடைய சிட்டுக்குருவிகள் பறந்து பறந்து கொத்தித்தின்னும் தானியச்சொற்கள் விளம்பரமாகின்றன உடலை எப்பொழுதோ அவ்வெளியில் மிதந்தலைய விட்டிருந்தேன் நீள்வட்டப்பாதைகளில் இயங்கும் பால்வெளிக்கோளைப்போல ஓயாத துடிப்புடன் எந்தவொரு எரிநட்சத்திரத்தையும் தின்றுச் செரித்துவிடும் வேட்கையுடன் மினுமினுப்புடன் பசுமாட்டின் கனத்த முலைகளைப் போல விரல்களால் காமம் கறப்பதற்காய் மட்டும் தொழுவத்தில் தொங்கவில்லை ஆண் பெண் இரு சுனைகளையும் எனதேயாக்கி என் பிரக்ஞை சுடர்விட்டெரிய மிதந்தலைகிறேன் ஒரு பால்வெளிக்கோளென… Continue reading மின்வெளி / குட்டி ரேவதி கவிதைகள்