மாலை நேரக்காற்று / சல்மா கவிதைகள்

முன்னிற்க மணநாளில் பவ்யமாய் விடை பெறுகிறாள் மணப்பெண் அவளது பர்தாவுக்குள் முகம் புதைத்தபடி மலர்களின் வாசனையோடிணைந்த புணர்ச்சியைப் போதிக்கிறாள் தமக்கை. தானே அறிந்திராத தடித்த புத்தகத்தின் பக்கங்களை துரிதகதியில் புரட்டுகிறாள் எந்த நாளில் புணர்ந்து கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும் ஹராமாக்கப்பட்டதெனவும் கூடவே புணர்ச்சிக்குப் பிந்தைய சுத்த பத்தங்களையும் தன் குள்ள உருவத்திற்கேற்ற குற்றக் கண்களில் குறுக்கிடுகிற வாழ்வின் சுகவீனங்களையும் நைந்து போன புணர்ச்சியின் வெற்றுச் சூத்திரங்களையும் தனக்குள்ளாக ஒளித்தபடி அவ்வப்போது வெட்கத்தில் துவண்டு விழுகிற வார்த்தைகளை சிறுமியின்… Continue reading மாலை நேரக்காற்று / சல்மா கவிதைகள்

சுவாசம் / சல்மா கவிதைகள்

எப்பொழுதும் எனது எல்லாக் காரியங்களும் நான் இல்லாத போதே நிகழ்ந்துவிடுகின்றனே ஒவ்வொரு முறையும் எதையும் ஸ்பரிசித்து உணர்வதற்குள் அவை நிகழ்ந்து முடிகின்றன நான் முயன்றுதான் பார்க்கிறேன் என்றாவது எதுவாயினும் நிகழ்வதற்கு முன்பே நான் அதைத் தொடுவதற்கு ஆயினும் என் முயற்சிகளைத் தோற்கடித்து எனக்காக நிகழும் அவை நானில்லாமலேயே நடந்துவிடுகின்றன மலர்கள் மனிதர்களுடனான உலகம் மிகப் பெரியது என்னை விட நான் அனுமதிக்கத்தான் வேண்டுமா என் சுவாசம் நானின்றி நிகழ்வதை

விலகிப் போகும் வாழ்க்கை / சல்மா கவிதைகள்

இன்றும் ஒருவரை என்னை விட்டு வழியனுப்ப நேர்கிறது நேற்றும் அதற்கு முன்பும் கூட நீங்கள் நினைப்பது போல இது வாசல் வரை சென்று வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும் வயதை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வை வழியனுப்புதல் போல இதயத்தைக் கனக்க வைக்கிறது இப்படியே நம் நண்பர்களை நினைவூகளை சிந்தனைகளை தினமும் ஏதேனும் ஒன்றை வழியனுப்பிக்கொண்டிருப்பதை நீங்கள் யாரும் ஆழமாய் அறிவதில்லை அதனாலேயே உங்களால் சிரித்த முகத்துடன் இருக்கவூம் பத்திரிகை படிக்கவும் முடிகிறது நானோ பயணத்தில்… Continue reading விலகிப் போகும் வாழ்க்கை / சல்மா கவிதைகள்

பட வீட்டின் தனிமை / சல்மா கவிதைகள்

சுவரில் தொங்கும் வரைபட மர நிழலும் ஒற்றைக் குடிசையும் கொஞ்சம் பூக்களும் ஒரு வானமும். கண்கள் பூக்கள் மீதிருக்க மனம் தேடிப் போகிறது வரைபட வீட்டின் தனிமையை.