எல்லாத் தெருக்களையும் போலவே எனதும் இரண்டு வரிசை வீடுகளுக் கிடையில் அமைந்தது பிள்ளைப் பருவத்திலிருந்து இன்று வரைக்கும் அதன் மேல் நடக்காத நாளொன்று கிடையாது தெருவில் அதிக மாற்றமும் இல்லை இரண்டு தென்னைகள் அகற்றப்பட்டன பச்சைப் புல்லின் புதர்கள் இப்போது இடம்மாறித் தெருவில் வளர்ந்து வருகின்றன தெருவை நான்காய்ப் பிரித்தால் முதலாம் பகுதியில் அமைந்ததென் வீடு பழசு ஓடு சரிந்தது எடுப்பிலேயே வீடிருந்ததால் தெருவை முழுக்க வயதான பிறகு ஒருமுறைகூட நடந்து பார்க்கவில்லை. ஒன்றிலிருந்து திரும்பிய பிறகே… Continue reading தெரு / ஞானக்கூத்தன் கவிதைகள்
Author: poets
பாலை / ஞானக்கூத்தன் கவிதைகள்
வெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில் உலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி பூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக் காலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து விடியற் பறவைகள் ஒருசில கூவ வந்தேன் என்றாள் வராது சென்றாள் யாருடன் சென்றாள் அவரை ஊரார் பலரும் அறியத் தானறியா மடச்சி உருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின் எஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி நடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி மதியச்சோறு நெடுங்கிளைப் புளியின் நிழலில் உண்போர்… Continue reading பாலை / ஞானக்கூத்தன் கவிதைகள்
கரப்பானைப் பற்றிக் கொண்டது பல்லி / ஞானக்கூத்தன் கவிதைகள்
கரப்பானைப் பற்றிக் கொண்டது பல்லி கரப்பான் தண்ணீர் பக்கெட்டின் வெளியில் கனாக்காண உள்ளேயிருந்து வெளிப்பட்டபோது. அவசரப் படாமல் தின்றது பல்லி அதன் குறிகள் கரப்பானுக்கு மௌனமாய்ப் போதித்ததெவ் வுண்மை? விலக்கிவிடாமல் இருந்து பார்த்து கரப்பான் மிஞ்சாமல் மறைந்ததும் எழுந்துபோய்த் தண்ணீர் குடித்துத் திரும்பிப் பக்கெட்டைப் பார்த்தேன் கவிஞன் எதிரில் கொலைக்கிடம் கொடுத்ததைக் காட்டிக் கொள்ளாதிருந்ததந்த நீல பக்கெட்டு
நகர மறுக்கிறது பொழுது… / ஞானக்கூத்தன் கவிதைகள்
நகர மறுக்கிறது பொழுது இன்னும் நெடுநேரம் ஆகும் இரவுக்கு நித்தியத்தின் வெயிலில் நன்றாக உலர்ந்து பக்குவம் அடைகிறது அன்றைய இரவு இன்னும் நேரமாகும் இரவு வர காற்றைக் கிழவன் வாயால் வெளிப்படுத்திக் கொண்டு கேட்கப் பிடிக்காத ஒருவனிடம் மறதியை ஊதி அந்தநாள்க் கதையைக் கூறுகிறான் குந்திக் குறிவிறைத்த யாளித் தலையிலிருந்து சாமித் தண்ணீர் கொட்டுகிறது மாலைக் கூட்டத்தில் பேச்சாளி மேற்கோள் கட்டுகளை வீசிக் கிளர்கிறான் காலட்சேபக் கூட்டத்தில் பிரசங்கிக்கும் பக்தர்க்கும் கூவம் உடம்பில் கமழ வத்திப் புகையும்… Continue reading நகர மறுக்கிறது பொழுது… / ஞானக்கூத்தன் கவிதைகள்
கல்லும் கலவையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்
கல்லும் கலவையும் கொண்டு கரணையால் தடவித் தடவி சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும் ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும் கட்டிடம் இல்லை பாலம். முன்னாளெல்லாம் பாலம் தியானித்திருக்கும் நீருக்கு மேலே இந்நாளெல்லாம் பாலம்… நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு. ஆதியில் இந்தப் பாலம் தென்னையாய்ப் பனையாய்க் கிடந்ததென்றாலும் போகப் போகப் போக மூங்கிற் சிம்பும் ஆணியும் விரும்பி ஒருவாறாகிப் பிறந்தது பூமியில் ஒருநாள் அதனுடன் பேசும் பொழுது வேலியும் படியும் கம்பமும் ஏணியும் தானே என்றது பாலம் இன்னும்… Continue reading கல்லும் கலவையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்
எங்கெங்கும் போவேன் / ஞானக்கூத்தன் கவிதைகள்
எங்கெங்கும் போவேன் என்ன வேண்டுமென்றாலும் பார்ப்பேன் எங்கெங்கும் போவேன் யாரை வேண்டுமென்றாலும் பார்ப்பேன் காலரைப் பிடித்துக் கொண்டு எங்கெங்கு போனாய் என்று கேட்குமா நியாயம் என்னை.
மூலைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
பூமியிலிருந்து சூரியன் வரைக்கும் அடுக்கிக் கொண்டு போகலாம் உலகில் உள்ள மூலைகளை எல்லாம் கணக்கெடுத்தால். இருந்தாலும் மூலை எல்லோருக்கும் சரிசமமாகக் கிடைப்பது கிடையாது தனக்கொரு மூலை கிடைக்கப் பெறாமல் இங்கும் அங்குமாய்ப் பலபேர் அலைகிறார் அழுக்கானாலும் சரி சிறிதென்றாலும் சரி உண்மையில் எதற்கும் பயனில்லை என்றாலும் சரி மூலை வேண்டும் ஒரு மூலை எல்லா மூலைகளையும் யாரோ பதுக்கி வைத்திருக்க லாமென்றும் பரவலாகச் சிலபேர் கருதுகிறார்கள் இனிமேல் மூலைகள் கிடைக்கும் வழியற்று வெதும்பிப் போனவர்கள் கோணம் வரைந்து… Continue reading மூலைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
அங்கம்மாளின் கவலை / ஞானக்கூத்தன் கவிதைகள்
பலகைக் கதவில் நான்காவதனைக் கஷ்டப்பட்டு விலக்கி எடுக்கையில் அங்கம்மாளின் கண்ணில் நாராயணன் வருவது தெரிந்ததும் அலுத்துக் கொண்டாள் ஊதுவத்தியில் இரண்டைக் கொளுத்திப் பூ கிடைக்காத சாமிப் படத்துக்கும் கல்லாப் பெட்டிக்கும் காட்டிவிட்டு இடத்தில் அமர்ந்தாள் அங்கம்மாள். கடைக்கு நாராயணன் வந்து சேர்ந்தான் சங்கடமான சிரிப்பொன்று காட்டினான். பார்க்காதவள் போல் அவளிருந்தாள் சுருட்டுக்காக அவன் வந்திருந்தான் முதல் வியாபாரத்தில் கடனைச் சொல்ல கூச்சப்பட்டு ஓரமாய் நின்றான் என்ன வென்று அவள் கேட்கவில்லை என்ன வென்று அறிந்திருந்ததால் சைக்கிளில் வந்தான்… Continue reading அங்கம்மாளின் கவலை / ஞானக்கூத்தன் கவிதைகள்
என் சிவனே / ஞானக்கூத்தன் கவிதைகள்
இந்நாள் வரைக்கும் நானமர்ந்தால் சப்திக்காத நாற்காலி எழுந்தால் அமர்ந்தால் ஓசை எழுப்பத் தொடங்கிற்று நீரை நோக்கிக் குனிந்தால் என் பிரதிபலிப்பின் சுமை பொறாமல் அலைகள் விரையும் மறுகரைக்கு. ஒரு ஜீவனுக்கும் என் பொருட்டால் துன்பமில்லாத நாள் மறைந்து ஒவ்வொரடிக்கும் ஒரு ஜீவன் மிதிபட்டுக் கூவக் கண்டேன் என் சிவனே
காக்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்
காக்கையை எனக்குத் தெரியும் யாருக்குத்தான் தெரியாது. ஆனால் இந்தக் காக்கையை எனக்குத் தெரியாது. எனக்கு நேரே ஏதோ என்னிடம் பேச வந்தாற் போலப் பரபரப்பில் அமர்ந்திருக்கும் இந்தக் காக்கை ஊரில் எனது குடும்பத்தினருக்குப் பழக்கமுள்ள காக்கை ஒன்று எங்கள் வீட்டுச் சிறிய கரண்டியை எடுத்துச் சென்று பெரிய கரண்டியைப் பதிலாய் ஒரு நாள் முற்றத்தில் போட்டதாம் இந்தக் காக்கை என்ன செய்யுமோ ? காலும் உடம்பும் கழுத்தின் நிறமும்… அதற்கு நவீன உலகம் பழகிவிட்டது காக்கையின் மூக்கில்… Continue reading காக்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்