யோஜனை / ஞானக்கூத்தன் கவிதைகள்

அம்மிக்கல் குழவிக்கல்
செதுக்கித் தள்ளும்
ஒரு சிற்பக் கூடத்தில்
மைல்கல் ஒன்று
வான் பார்த்துக் காட்டிற்று
நாற்பதென்று.