பூமியின் பிச்சைக்கார முகத்திலே ஒரு வெள்ளோட்டம் வயல்களில் தண்ணீரோட்டம் விளையாட்டுப் பிள்ளை ஓட்டம் புளியன் பூ வைத்தாயிற்று காவிப்பல் தெரிந்தாற் போல கிளைகளில் அக்கா பட்சி கூவின வெட்கத்தோடு தானொரு முதலை போலப் புதுப்புனல் ஆற்றில் ஓடும் ஊர்க்கூட்டம் கரையில் ஓட போகிறார் தலைக்குடத்தில் ஆற்றுநீர் துள்ளத் துள்ள நீர்மொண்ட குருக்கள் வர்ணக் குடையின்கீழ் ஈரத்தோடு கச்சேரி ஆசை உள்ள கோயிலின் மேளக்காரன் உற்சாகம் ஒன்றில்லாமல் தொடர்கிறான் ஊதிக்கொண்டு.
Category: Tamil Poetry
தவளைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
(1) தவளையின் கூச்சல் கேட்டுத் தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன் ஆயிரம் வருஷம் போச்சு போயிற்றா தவளைக் கூச்சல் மாதத்தில் ஒன்றைக் கண்ணன் மட்டுமா பிடிக்கும் என்றான் தவளைக்கும் பிடித்த மாதம் ஒன்றுண்டு பன்னிரண்டில் குளத்திலே இலைத் தண்ணீரில் குதூகலத் தவளைக் கூட்டம் குதித்திடும் கூச்சல் போடும் படித்துறை ஏறித்தாவும் நீர்மட்டத் தளவு தோன்றித் தாமதித்து நீரில் மீளும் தவளையின் வயிற்றைப் பார்த்தால் சந்தனக் கட்டி தோற்கும் கண் மறைவாக எங்கோ கதிரவன் தேர்க்கால் சிக்கி உருள்கிற சப்தம்… Continue reading தவளைகள் / ஞானக்கூத்தன் கவிதைகள்
காலைநடை / ஞானக்கூத்தன் கவிதைகள்
வில்லைத்தகர எழுத்துகளால் வெட்டுப்பட்ட விளம்பரம் போல் நிலத்தின் மீது வயல்வரப்பு விடிந்த நாளின் முதல் சிகரெட் நெருப்பைத் தவிர மற்றெல்லாம் பச்சை பொலியும் செழும்பூமி தோப்புப் பனைகள் தொலைவாக தாழைப் புதர்கள் உரசாமல் நடக்கும் அவரைத் தெரிகிறதா? கையில் கொஞ்சம் நிலமுண்டு ஸ்டேஷன் மாஸ்டர் கொடிபோல உமக்கும் இருந்தால் தஞ்சையிலே நீரும் நடப்பீர் அதுபோல
நஷ்டக் கணக்கு / ஞானக்கூத்தன் கவிதைகள்
வாகனம் தூக்கிக் கொண்டு தீவட்டி பிடித்துக்கொண்டு வாத்தியம் இசைத்துக்கொண்டு பலூன்கள் விற்றுக்கொண்டு தெருக்காரர் ஊர்வலத்தில் இருப்பதால் நஷ்டப்பட்டார் எங்களூர் அரங்கநாதர்
சரிவு / ஞானக்கூத்தன் கவிதைகள்
சூளைச் செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது.
பார்த்தல் / ஞானக்கூத்தன் கவிதைகள்
கூடைக்காரி சிலசமயம் குடும்பக்காரி வரும் தெருவில் டீச்சர் வந்தாள் குடைவிரித்து. …… ஒற்றைமாட்டு வண்டியிலே …… வைக்கோல் பாய்க்கு …… நெளிந்து தரும் …… மருத்துவச்சி தேடுகிறாள் …… எட்டிப் பார்த்து ஒரு வீட்டை விளக்குக் கம்பம் நடைக் கொம்பாய் நிற்கும் தெருவில் பிறபெண்கள் வந்தார் போனார் அவள் வரலே.
அந்திமம் / ஞானக்கூத்தன் கவிதைகள்
பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய் மரம் பட்ட சாலைக் கென்னை அனுப்பு முன் பேரைக் கொஞ்சம் சோதித்துப் பாருங்கள் ஸார்.
பவழமல்லி / ஞானக்கூத்தன் கவிதைகள்
கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக் கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத் தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு விசிறியதும் அவரோடு வீடு தூங்கும் பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும் தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத் தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?
கனவின் மனிதன் / ஞானக்கூத்தன் கவிதைகள்
ஒருவனைக் கனவில் கண்டேன் உதடுகள் பற்கள் கண்கள் தலைமயிர் நகங்கள் கை கால் அனைத்துமே மனிதன் போல இருந்திடும் அவனைக் கண்டேன் கனவிலும் மனிதன் போலத் தோன்றினால் மனிதன் தானா?
அந்தத் தெரு / ஞானக்கூத்தன் கவிதைகள்
சூத்திரர் தெருக்களென்று சொல்லுவார் ஏற்றாற்போல மாட்டுத் தோல் உலரும் ஆடு கோழிகள் நாய்கள் வாழும் முருங்கைகள் பிள்ளை வாதக் கிளைகளைத் தாழ்த்திக் கொண்டு குடிசையின் வாசற்பக்கம் ‘பசுபதி ஆறாம் பாரம்’ என்கிற சாக்குக் கட்டி எழுத்துக்கள் தெரியும் குச்சு இடச்சாரி பெரியகுச்சு மல்லிகை முல்லை சாணி முட்டைகள் முருங்கைக் காய்கள் விற்கிற பழக்கமுள்ள வீடுகள் ஆங்காங்குண்டு தனிப்பட வர மாட்டாமல் கடவுளின் துணையில் அங்கே வருகிறான் பார்ப்பான் சாமி வலம் வர வேதம்பாடி.