காகித வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

திடீரென்று ஆனால் சர்வ நிச்சயத்துடனே அன்று தொடங்கிய எனது வாழ்வை வியக்கிறேன் திரும்பிப் பார்த்து. நான் அதைக் கேட்கவில்லை எனக்காக யாரும் கேட்கவில்லை என்பதுறுதி ஆனால் ஏனது உண்டாயிற்று? அவ் வேத கோஷத்தோடு மழை மண்ணில் இறங்கும் போது இவ் இது என் வாழ்க்கை வானி லிருந்து பொட்டலம் போல் வீழ- பொட்டல மான யானே என்னையே பிரித்துப் பார்க்கும் அதிசயம் இதன் பேரென்ன? நிச்சயத்தோடு அன்று வாழ்க்கையே தொடங்கிற் றென்றால் எங்கிருந் தாரம்பம் என்று தேடு… Continue reading காகித வாழ்க்கை / ஞானக்கூத்தன் கவிதைகள்

உபதேசம் / ஞானக்கூத்தன் கவிதைகள்

அன்பைத் தவிர வேறொரு செய்தி விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை நீண்டதாய் எங்கும் செல்வதாய் இருக்க வேண்டும் என் அன்பு சக்கரம் பொருந்தி சுமையை எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.

சும்மா / ஞானக்கூத்தன் கவிதைகள்

இறுகத் திருகியதும் கழுத்தில் துளிர்த்ததை மனத்தில் கண்டு எழுது கோலைத் தேடி எடுத்தேன் போதுமா இன்னும் ஊற்ற வேண்டுமா? மூடுதல் எளிமை திறப்பது கடினம் மூடலே கடினமாய் இருக்குமானால்? எளியதாய்த் திறந்து கொண்ட எழுது கோலின் தொண்டைக் குள்ளே ஒலிக்காத சொற்கள் போலக் குமிழிகள். ஊதிப் பார்த்தேன். ஊசியால் குத்திப் பார்த்தேன் குமிழியில் ஒன்று கூட அதற்கெல்லாம் உடையவில்லை ஊற்றினேன் மையை மை மேல் வந்தது குமிழிக் கூட்டம் வெளியிலே விழுந்தடித்து திருகினேன் இறுக்கி. அங்கே கழுத்தில்… Continue reading சும்மா / ஞானக்கூத்தன் கவிதைகள்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன ஆசை மிகுந்த அணிலொன்று வந்தது பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது. முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித் தடுத்திழுத்து நிறுத்திய போதும் ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க உலவைப் பழங்கள் எங்கும் சிதறின ஜன்னலை விட்டுத் திரும்பினேன் எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று.

நட்டு / ஞானக்கூத்தன் கவிதைகள்

வட்டச் சந்திலும் சதுரச் சந்திலும் மூன்றுநாட் புழுதி அடைந்திருக்கும் இரும்பு நட்டொன்று எதிரில் கிடந்தது எங்கும் இனிமேல் பொருந்தாத நட்டு என்றாலும் பாரம் அதற்கொன்று உண்டு எடுத்துக் கொண்டேன் உள்ளங்கையில் உருட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன் கிண்ணத்து நீரில் மூழ்க வைத்தேன் சாலிக்ராம பூசை செய்வதாய் அம்மா என்னைப் போற்றத் தொடங்கினாள் இனிமேல் வீட்டில் சுபிட்சம் என்றாள் மனைவி பார்த்து கெக்கலித்தாள் பிள்ளைகள் அதனை ஆசை தீரதர தெருவில் பந்தாடிக் களித்தார்கள் அதற்கு பின்பு நட்டு வலைஞன்… Continue reading நட்டு / ஞானக்கூத்தன் கவிதைகள்

பிரிவும் சேர்க்கையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

என்னை நோக்கிக் கையொன்று நீண்டது. குச்சிக் குப்பை ரேகை படர்ந்த உள்ளங் கையைத் தொடர்ந்து பார்த்தேன். இல்லை யென்றும் அதற்குள் சொன்னேன். இல்லை யென்றதும் மடங்காத தனது கையை எடுத்துக் கொண்டு அவள் நகர்ந்தாள். இருப்பிடத்துக்குத் திரும்பும் பொழுது சட்டைத் துணியில் மசித் துளிக் கறை போல் அவளது கண்கள் நினைவில் எழுந்தன. பிச்சையே எடுப்பாள் என்று நினைத்தேன். இரண்டாம் வகுப்பின் கழிவறைப் பக்கம் சீட்டில்லாமல் பயணம் செய்வாள் அப்படி ஒருநாள் பார்க்கும் பொழுது கொடுப்பதாய் எண்ணினேன்.… Continue reading பிரிவும் சேர்க்கையும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

சந்தேகத்துடனே தொட்டுப்பார்த்தேன் பையிலிருந்த பேனாவைக் காணோம் வழியில் எங்கோ விழுந்து விட்டது நீண்ட நாட்களாய்ப் பழகிய பேனா எங்கே விழுந்ததோ யாரெடுத்தாரோ ஒருகணம் நினைத்தேன் வழியில் அதன்மேல் வண்டி ஒன்று ஏறிவிட்டதாய். எண்ணிப் பார்த்ததும் உடம்பு நடுங்கிற்று வண்டி எதுவும் ஏறியிராது. பள்ளிக்கூடத்துப் பிள்ளையின் கையில் கிடைத்திருக்கலாமென்று எண்ணிக் கொண்டேன். முள்ளைக் கழற்றிக் கழுத்தைத் திருகிப் பல்லால் கடித்துத் தரையில் எழுதி அந்தப் பையன் பார்ப்பதாய் எண்ணினேன் அதற்கும் நடுங்கி எண்ணத்தை மாற்றினேன் எவனோ ஒருவன் கிழவன்… Continue reading இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும் / ஞானக்கூத்தன் கவிதைகள்

குப்பைத் துணை / ஞானக்கூத்தன் கவிதைகள்

அவருடன் காகிதக் குப்பைச் சுருளொன்று அவருக் கிணையாய் விரைந்து வந்தது அவரால் அழைத்து வரப்படுவதைப் போல் அன்னார் என்னைக் கடந்து சென்றார் அதுவும் அவரைத் தொடர்ந்து சென்றது என்னைப் பார்த்துக் கண் சிமிட்டி.

மழையில் / ஞானக்கூத்தன் கவிதைகள்

மழையில் நனைந்த கந்தல்த் துணி மீது பாத சாரியின் செருப்புக் கால் ஊன்றி அகன்றது. கந்தல்த் துணியின் தண்ணீர் பிழியப்பட்டு ஊர்ந்ததைக் கண்டேன் நெஞ்சம் நெகிழ்ந்தது. உவமை ஒன்று துன்புற்ற தென்று.